மனிதனால் விண்ணில் பறக்க முடியும் ஆனால் முடியாது: என்ன கொடுமை சார் இது

மனிதர்களாகிய நாம் விமானத்தின் மூலம் விண்ணில் பறக்கிறோம். ஆனால் பறவைகள் போல பறக்க முடிவதில்லை. அதற்கு சிறகுகள் இல்லாதது மட்டும் தான் காரணமா.. இல்லை அதற்கு வேறு பல காரணங்களும் உண்டு. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 11, 2020, 09:40 PM IST
  • மனிதர்கள் பறவைகளைப் போல பறக்க முடியாததற்கு சிறகுகள் இல்லாதது மட்டும் காரணம் இல்லை.
  • பறவைகளின் எடை, பறக்கும் தன்மை ஆகியவற்றை பொருத்து அதன் இறக்கைகள் இருக்கின்றன.
  • பெரிய பறவைகளுக்கு பெரிய இறக்கைகளும், சிறிய பறவைகளுக்கு சிறிய இறக்கைகளும் உள்ளன.
மனிதனால் விண்ணில் பறக்க முடியும் ஆனால் முடியாது: என்ன கொடுமை சார் இது title=

மனிதர்களாகிய நாம் விமானத்தின் மூலம் விண்ணில் பறக்கிறோம். ஆனால் பறவைகள் போல பறக்க முடிவதில்லை. அதற்கு சிறகுகள் இல்லாதது மட்டும் தான் காரணமா.. இல்லை அதற்கு வேறு பல காரணங்களும் உண்டு. 

பறவைகளை பார்க்கும் போது, நம்மால் அவ்வாறு சிறகடித்து பறக்க முடியவில்லை என்ற ஏக்கம் பலருக்கு ஏற்படலாம். அதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்தால், அதற்கு சிறகுகள் இல்லாதது மட்டும் காரணம் அல்ல என்பது புரிகிறது.

சிறகுகள் அதாவது இறக்கைகள் இல்லாதது தான் காரணம் என்றால், மனிதர்களான நாம் பறக்க  வேண்டும் என்றால், இறக்கைகளை வைத்துக் கொண்டாலே போதுமே இல்லையா...

சிறகுகளின் சிறப்பு அம்சம் என்ன என பார்த்தால், பறவைகளின் சிறகுகள் ஒரு சிறப்பு வடிவமைப்பை கொண்டுள்ளன, அதாவது அவற்றின் இறக்கைகள் காற்றை சரியாக கிழிக்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன, அதே சமயம், மனிதர்களாகிய நம்மிடம் நம்மிடம் இருக்கும் ஆயுதங்கள்,  கருவிகள் ஆகியவை இறக்கைகளாக செயல்பட முடியாது, இதனால் நாம் பறக்க முடியாது.

பறவைகளின் எடை, பறக்கும் தன்மை ஆகியவற்றை பொருத்து அதன் இறக்கைகள் இருக்கின்றன. பெரிய பறவைகளுக்கு பெரிய இறக்கைகளும், சிறிய பறவைகளுக்கு சிறிய இறக்கைகளும் உள்ளன.

நாம் இறக்கை பொருத்திக் கொண்டாலும் பறக்க முடியாததற்கு காரணம் நமது எடை. பறவைகள் பொதுவாக மிகவும் லேசானவை. நாம் பறக்க நினைத்தாலும் நமது உடல் எடை காரணமாக பறக்க முடிவதில்லை

ALSO READ  | நமக்கு ஏன் வியர்க்கிறது... வியர்வைக்கும் நோய்க்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா..!!!

பறவைகள் (மனிதர்கள்) போலவே, அதன் எடையும் பறக்க முடியாமல் இருப்பதற்கு ஒரு காரணம்.

இங்கே எழும் இன்னொரு சிக்கல் என்னவென்றால், நம் எடைக்கு ஏற்ற வகையில்,  இறக்கைகளை கையாளும் வகையில் இறக்கைகளைக் கையாள நம் தோள்களிலும் கைகளிலும் போதுமான வலிமை இல்லை. இறக்கைகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.

பறவைகள் காற்றில் பறக்கும்போது, ​​காற்று அவற்றின் பரவலான இறக்கைகளின் மேல் மற்றும் கீழ் இரண்டு நிலைகளிலும் உள்ளது. ஆனால் இரண்டு நிலைகளிலும் உள்ள காற்றில் வேகத்தில் வேறுபாடு உள்ளது. இறக்கைகளின் வடிவ அமைப்பில், இறக்கைகளுக்கு மேலே உள்ள காற்றின் வேகம் எப்போதும் இறக்கையின் கீழ் இருக்கும் வேகத்தை விட அதிகமாக இருக்கும். இதன் விளைவாக மேல் புறம் உள்ள இறக்கைகளின் அழுத்தம் கீழே இருப்பதை விட குறைவாக உள்ளது. இதன் காரணமாக, பறவை காற்றில் பறக்கிறது. கீழேயும் விழாது. 

கிளைடர்கள் மற்றும் விமானங்களிலும் இதே அம்சம் பொருந்தும். ஆனால் தான் கருவியின் எடையுடன் ஒப்பிடும்போது, ​​அவற்றின் இறக்கைகள் பெரிதாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும்.

அதே நேரத்தில், இறக்கைகள் மேலும் கீழும் அசைப்பதும் ஒரு முக்கியமான செயலாகும். இது பறவைகள் காற்றில் முன்னோக்கி நகரும் அத்தகைய சக்தியைப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாக அவை உயரம் வரை செல்ல முடியும், இது கிளைடரில் சாத்தியமில்லை. ஆனால் விமானங்களில் இதற்கு தனி அமைப்புகள் உள்ளன.

ALSO READ | ஆன்மீகம், ஆரோக்கியம் இரண்டிற்கும் உகந்த தேங்காய்...!!! 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News