Astro: செவ்வாய்க்கிழமையின் அதிர்ஷ்ட ராசிகள்... பலன்களும் பரிகாரங்களும்!

ராசிபலன்: பங்குனி மாதம் ஆறாம் தேதி, மார்ச் மாதம் 19 ஆம் தேதி, சந்திரன் மிதுன ராசி இருந்து கடக ராசிக்கு செல்வார். இதனால் உருவாகும் சோபன யோகம், ரவி யோகம் ஆகியவற்றுடன் புனர்பூச நட்சத்திரமும் இணைகிறது.

அன்றைய நாளின் கிரக நிலைகள், நட்சத்திரம், உருவாகும் யோகங்கள், ஆகியவற்றை வைத்து தின பலன் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில், மார்ச் மாதம் 19 ஆம் தேதியில் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.

1 /8

நிகழும் சோபகிருது வருடம், பங்குனி மாதம் ஆறாம் தேதி, வளர்பிறை சுக்கில பக்ஷ தசமி திதி, புனர்பூச நட்சத்திரம் கூடிய தினம், யாருக்கெல்லாம் அதிர்ஷ்ட நாளாக அமையும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

2 /8

ரிஷப ராசி எனக்கு மார்ச் மாதம் 19ஆம் தேதி, மங்களகரமான நாளாக இருக்கும். இன்றைய தினம் சொத்து வாங்கும் ஆசை நிறைவேறும். செயல்திறனால் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். வேலையை நேரத்தில் முடிப்பதால், திருப்தி உணருவோம் உண்டாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

3 /8

மிதுன ராசியினருக்கு, வெற்றியை அள்ளித்தரும் நாளாக மார்ச் மாதம் 19ஆம் தேதி இருக்கும். லாபம் பெருகும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

4 /8

கன்னி ராசியினருக்கு, மார்ச் மாதம் 19 ஆம் தேதி சிறப்பான நாளாக இருக்கும். வாழ்க்கையில் இருந்து வந்த தொல்லைகள் தடைகள் விலகும். உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மீக விஷயத்தில் ஆர்வம் இருக்கும் முகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் பாராட்டை பெறுவார்கள்.  

5 /8

விருச்சிக ராசியினருக்கு மார்ச் மாதம் 19ஆம் தேதி நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் நாளாக இருக்கும். உடல் நல பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையில் வெற்றிகளை குவிப்பீர்கள். குடும்பத்தினருடன் விளக்கமான சூழ்நிலை நிலவும். முதலீட்டில் லாபம் கிடைக்கும்.

6 /8

மீன ராசியினருக்கு மார்ச் மாதம் 19ஆம் தேதி செல்வாக்கு நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் ஆளுமையை அனைவரும் போற்றுவார்கள். சாதனைகளால் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் தேர்வுகளில் சிறந்து விளங்குவார்கள்.

7 /8

சண்டை சச்சரவுகள் அனைத்தும் விலக, ஸ்ரீராம பக்த அனுமானை வணங்கி, ஹனுமான் சாலிசா பாராயணம் செய்வது பலன் அளிக்கும்.  11 அரச மர இலைகளில், சந்தனத்தால் ஸ்ரீ ராம என்று எழுதி அர்ச்சனை செய்யலாம். அனுமானுக்கு வடை மாலை சாற்றி, பிரசாதத்தை அனைவருக்கும் விநியோகிப்பது பலன் அளிக்கும்.

8 /8

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.