காது வலி பாடாய் படுத்துதா? இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்

Ear Pain Home Remedies: காது வலி ஒரு பொதுவான நோய். ஆனால் அது பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. காது வலி ஏற்பட்டுவிட்டால், நம்மால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடிவதில்லை.

 

இதன் காரணமாக நாம் பல வித சிரமங்களை எதிர்கொள்கிறோம். பொதுவாக, காது வலி சளி அல்லது ஏதேனும் தொற்று காரணமாக ஏற்படுகிறது. காது வலி ஏற்பட்டால், உடனடியாக அதற்கான மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது. ஆனால், அப்படி செல்ல முடியாத சூழ்நிலையில் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் இதை சரி செய்யலாம், அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

 

1 /6

2 பூண்டு பற்களை பொடியாக நறுக்கி பூண்டை கடுகு எண்ணெயில் சூடாக்கி, ஆறிய பின் வடிகட்டவும். இதற்குப் பிறகு காதில் 2 முதல் 3 சொட்டு விட்டால் நிவாரணம் கிடைக்கும்.

2 /6

ஒரு ஸ்பூன் வெங்காயச் சாற்றை லேசாக சூடாக்கி, ஆறிய பிறகு 2 முதல் 3 துளிகள் காதில் விட்டால் நிவாரணம் கிடைக்கும். இந்த முறையை ஒரு நாளைக்கு 3 முறை செய்யவும்.

3 /6

துளசி இலைகளின் புதிய சாற்றை காதில் சில சொட்டுகள் விட்டு வந்தால் 1-2 நாட்களில் காதுவலி முற்றிலும் குணமாகும்.

4 /6

வேப்ப இலையை சாறு எடுத்து காதில் 2 முதல் 3 துளிகள் விட்டால் காது வலி மற்றும் தொற்று நீங்கும்.

5 /6

இஞ்சி சாறு எடுத்து காதில் 2 முதல் 3 துளிகள் விடவும். இது தவிர இஞ்சியை அரைத்து ஆலிவ் ஆயிலில் கலந்து வடிகட்டி 2-3 சொட்டு காதில் விடலாம்.   

6 /6

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை