மனைவி வீட்டில் இல்லாத போது கணவர் என்ன எல்லாம் செய்வாங்க தெரியுமா?

மனைவிகள் ஊரில் இல்லாத சமயத்தில் பெரும்பாலான கணவர்கள் அவர்களது முன்னாள் காதலியை நினைந்து உருகி அவர்களுடன் பேசும் முயற்சியில் ஈடுபடுவார்கள். 

 

1 /5

மனைவிமார்கள் ஊருக்கு சென்றுவிடும்பொழுது கணவன்மார்கள் அவர்களது பள்ளி அல்லது கல்லூரி நண்பர்களுடன் மொபைலில் பேசுவது, அதிலும் முக்கியமாக சிலர் முன்னாள் காதலியுடன் பேசும் முயற்சியிலும் ஈடுபடுவார்கள்.  முன்னாள் காதலியுடனான முத்தான நேரங்களை நினைவுகூர்ந்து, மனம் விட்டு பேசி ஃபீல் ஆவார்கள்.  

2 /5

மனைவிகள் வீட்டில் இருக்கும்போது வேலை விட்டால் வீடு, வீடு விட்டால் வேலை என்று இருக்கும் கணவன்கள் அவர்கள் ஊரில் இல்லாத சமயத்தில் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வார்கள்.  குளியலறை, கழிவறைகளுக்கு மொபைலுடன் செல்வது, அங்கேயே நீண்ட நேரம் செலவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.  

3 /5

பேச்சிலர் வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி இருக்கும் கணவன்மார்கள் மனைவி ஊருக்கு சென்றதும் பேச்சிலர் வாழ்க்கையை அனுபவிக்க விருப்பப்படுவார்கள்.  நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி செல்வது அல்லது வீட்டிலேட் பார்ட்டி கொண்டாடுவது போன்றவற்றை செய்வார்கள்.  

4 /5

பொதுவாக வீட்டில் பெண்கள் சீரியல்களை பார்த்து ரசித்து கொண்டிருப்பதால் கணவன்களால் டிவி பார்க்க முடியாது, அவர்களும் டிவி பார்க்க விருப்பம் இல்லாதது போலவே நடந்து கொள்வார்கள்.  அதுவே மனைவி ஊருக்கு சென்றுவிட்டால் விடிய விடிய சிலர் தனக்கு பிடித்த நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்வார்கள்.  

5 /5

மனைவி ஊரில் இல்லாத நேரத்தில் சிலர் ஏதேனும் புதுவிதமாக சமையல் செய்து பார்ப்பார்கள், சிலருக்கு தனது வீட்டில் என்னென்ன பொருட்களெல்லாம் இருக்கிறது என்பது மனைவி ஊரில் இல்லாத சமயத்தில் தான் தெரியும்.  அப்போது தான் புதுசாக எல்லா பொருட்களையும் பார்ப்பது போல பார்ப்பார்கள்.