மேகவெடிப்பால் சீர்குலையும் உத்திராகண்ட் இமாச்சல பிரதேச மாநிலங்கள்

Cloudburst Wreak Havoc: மேகவெடிப்பால் அவதியுறும் இமயமலை மாநிலங்களில் நிலச்சரிவும் கனமழையும் அதிக சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் ராய்பூரில் சனிக்கிழமை காலை மேக வெடிப்புக்குப் பிறகு கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேரைக் காணவில்லை.

மேலும் படிக்க | தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை

1 /5

உத்தரகாண்டின் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ராய்பூர் தொகுதியில் உள்ள சர்கெட் கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டது. கிராமத்தில் இருந்து அனைவரும் மீட்கப்பட்டு நிவாரண மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக SDRF தெரிவித்துள்ளது. (Photo Courtesy: ANI)

2 /5

நிலச்சரிவு காரணமாக இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள கந்தகாட்டில் தேசிய நெடுஞ்சாலை 5 மூடப்பட்டுள்ளது. (Photo Courtesy: ANI)

3 /5

இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவிலும் வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. (Photo Courtesy: ANI)

4 /5

டெஹ்ராடூனில் உள்ள தப்கேஷ்வர் மகாதேவ் கோயில், வெள்ளம் போன்ற சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் முற்றிலும் அழிந்துவிட்டதாக கோயில் அர்ச்சகர் திகம்பர் பாரத கிரி தெரிவித்தார்.(Photo Courtesy: ANI)

5 /5

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ரா நகரில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவில் அருகே கனமழை காரணமாக சனிக்கிழமை வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்கள் வருகை நிறுத்தப்பட்டது. பின்னர், மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். (Photo Courtesy: ANI)