போதை மருந்து விருந்து: நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் உட்பட 5 பேர் கைது

Siddhant Kapoor Drug Case: போதைப்பொருள் உட்கொண்டதாக நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 13, 2022, 12:24 PM IST
  • பெங்களூரில் பார்ட்டியில் இருந்து கைது செய்யப்பட்ட சித்தாந்த்
  • போதைப்பொருள் உட்கொண்டது தெரியவந்தது
  • சுஷாந்த் வழக்கில் ஷ்ரத்தாவிடம் என்சிபி விசாரணை நடத்தியது
போதை மருந்து விருந்து: நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் உட்பட 5 பேர் கைது title=

பெங்களூர் நட்சத்திர விடுதியில் போதை மருந்து விருந்தில் பங்கேற்றதாக இந்தி நடிகர் சக்திகபூர் மகனும் போதைப் பொருள் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதருமான நடிகர் சித்தாந்த் உட்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவருக்கு நடந்த மருத்துவப் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொண்டது உறுதிசெய்யப்பட்டதையடுத்து, இந்த நிலையில் அவர் பெங்களூரில் உள்ள உலசூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சித்தாந்த் கபூர் ஒரு நட்சத்திரக் குழந்தை ஆவார். அவர் சக்தி கபூரின் மகன் மற்றும் ஷ்ரத்தா கபூரின் சகோதரர் ஆவார். சித்தாந்தும் திரைப்பட உலகில் தனது முயற்சியை மேற்கொண்டார், ஆனால் அவர் தனது தந்தை மற்றும் சகோதரியைப் போல வெற்றிபெறவில்லை. சித்தாந்த் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். ஒரு நட்சத்திரக் குழந்தையாக இருந்தாலும், சித்தாந்த் டிஸ்க் ஜாக்கியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் இந்தி சினிமாவின் பிரபல இயக்குனர்களுடன் இந்தி சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றினார். உதவி இயக்குநராக, சித்தந்த் 'பூல் புல்லையா', 'பாக்-பாக்', 'சுப் சுப் கே', 'தோல்' போன்ற படங்களில் பணியாற்றினார்.

மேலும் படிக்க | சாலையில் கிடந்த கள்ளநோட்டு அடிக்க பயன்படுத்தும் வெள்ளை காகிதம்!

இந்த நிலையில் தற்போது பெங்களூரு எம்.ஜி.சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் போதை மருந்து விருந்து நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையானது 35 பேரிடம் நடத்தப்பட்டது. சோதனை முடிவில் பெங்களூரு எம்.ஜி.சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் போதை மருந்து விருந்து நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

Shakti Kapoor’s son Siddhanth Kapoor held by police in drug case

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான சர்ச்சையில் விசாரணைக்குட்படுத்தவர் நடிகை ஷ்ரத்தா கபூர். அப்போது ஷ்ரத்தா கபூரிடம் போதைப் பொருள் தடுப்பு போலீசார் பல மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். ஆனால் ஷ்ரத்தா கபூருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படவில்லை.

அதேபோல்  கடந்த ஆண்டு மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை மருந்து விருந்து நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தியாதில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆர்யன்கான் மீதான போதைப் பொருள் குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 12 வயது சிறுமியிடம் இருந்து 15 முறை கருமுட்டை திருட்டு! தந்தை உட்பட 3 பேர் கைது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News