குறும்படத்தில் நடித்துள்ள சஞ்சீவ் மற்றும் நளினி! இயக்குனர் யார் தெரியுமா?

Gopinath Narayanamoorthy Short film: கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் குறும்படத்தில் சஞ்சீவ், நளினி, பாப்பி மாஸ்டர் ஆகியோர் முக்கிய வேடங்களில்  நடித்துள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Apr 23, 2024, 09:59 AM IST
  • சஞ்சீவ் மற்றும் நளினி நடிக்கும் குறும்படம்.
  • கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கி உள்ளார்.
  • சமுதாய‌த்தில் மாற்றத்தை வலியுறுத்தும் படமாக இருக்கும்.
குறும்படத்தில் நடித்துள்ள சஞ்சீவ் மற்றும் நளினி! இயக்குனர் யார் தெரியுமா? title=

கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் குறும்படத்தில் சஞ்சீவ், நளினி, பாப்பி மாஸ்டர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசும் இந்த குறும்படம் சமுதாய‌த்தில் மாற்றத்தை வலியுறுத்தும். தமிழில் 'தங்க முட்டை' மற்றும் தெலுங்கில் 'பங்காரு குட்டு' என இருமொழிகளில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தை எழுதி இயக்கி வரும் கோபிநாத் நாராயணமூர்த்தி, ஒரு முக்கிய கருத்தை வலியுறுத்தும் சுவாரசியமான குறும்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் அரசியலமைப்பின் முக்கியமான‌ தூண்களில் ஒன்றில் மாற்றத்தை பரிந்துரைக்கிறது. ‘தங்க முட்டை’ படத்தில் நாயகனாக நடிக்கும் தெலுங்கு நடிகர் சம்பூர்ணேஷ் பாபுவுக்கு தமிழில் டப்பிங் பேசும் பிரபல நடிகர் சஞ்சீவ் அரசு அதிகாரியாக இந்த குறும்படத்தில் நடிக்கிறார். நடிகை நளினி, பாப்பி மாஸ்டர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் படிக்க | 3 மணி நேரத்திற்குள் நல்ல தமிழ் படம் பார்க்க வேண்டுமா? ‘இதை’ பாருங்க..

தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் உருவாகும் இந்த குறும்படத்திற்காக 'தங்க முட்டை' படக்குழுவினருடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் இயக்குநர் கோபிநாத் நாராயணமூர்த்தி. பவி கே பவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் படத்தொகுப்பையும், பிவி பாலாஜி கலை இயக்கத்தையும் கவனிக்கின்றன‌ர். முக்கியமான கருத்தை மக்களிடம் தாமதமின்றி கொண்டு சேர்க்க வேண்டும் என்று கோபிநாத் நாராயணமூர்த்தி கருதுவதால், இக்குறும்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. மை கிண்டா பிலிம்ஸ் இந்த குறும்படத்தை தயாரிப்பதோடு, இன்னும் சில‌ திரைப்படங்களையும் தயாரிக்கவுள்ளது. ஒரு பெண் குழந்தையின் வழியாக சொல்லப்படவுள்ள இந்த கதை, இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்று கூறிய‌ முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ஏபிஜே அப்துல் கலாமின் லட்சியத்தையும் நமக்கு நினைவூட்டும். 

பன்னாட்டு நிறுவனங்களுடன் பணியாற்றிய அனுபவம் பெற்ற தகவல் தொழில்நுட்ப நிபுணரான கோபிநாத் நாராயணமூர்த்தி சினிமா மீதான பற்றால் இயக்குநர் ராஜிவ் மேனனின் மைண்ட்ஸ்கிரீன் திரைக்கதை மற்றும் திரைப்பட இயக்க பயிற்சி மையத்தில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர்கள் மிலிந்த் ராவ், ஆர் கண்ணன் மற்றும் பிஜோய் நம்பியார் ஆகியோரிடமும் இவர் பணியாற்றியுள்ளார். பின்னர் இவர் ஒரு திரை எழுத்து நிறுவனத்தை தொடங்கியபோது, இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக இயக்குநராக உருவெடுத்துள்ளார்.

மேலும் படிக்க | 20 ஆண்டுகளுக்கு பிறகும் நின்று பேசும் கில்லி! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News