நினைத்தேன் வந்தாய்: செல்வியின் கழுத்தை நெரித்த மனோகரி.. வலை வீசி தேடும் ரவுடிகள்

Ninaithen Vandhai Today's Episode Update:  ஒரே கேள்வி.. செல்வியின் கழுத்தை நெரித்த மனோகரி.. வலை வீசி தேடும் ரவுடிகள் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 28, 2024, 03:33 PM IST
  • நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
  • ஒரே கேள்வி.. செல்வியின் கழுத்தை நெரித்த மனோகரி.
  • மீண்டும் சாமியாராக வரும் ராமையா.
நினைத்தேன் வந்தாய்: செல்வியின் கழுத்தை நெரித்த மனோகரி.. வலை வீசி தேடும் ரவுடிகள் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் போலி சாமியார் வேடத்தில் வந்த ராமையா மனோகரியை தீ சட்டியை எடுக்க வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது மனோகரி பரிகாரம் செய்து கஷ்டப்படுவதை சுடரும் நான்கு குழந்தைகளும் பார்த்து சந்தோசப்படுகின்றனர், இதனையடுத்து வீட்டிற்கு வந்த மனோகரி சாப்பிட போக நான்கு குழந்தைகளும் சேர்ந்து நீங்க வரதம், சாப்பிட கூடாது என்று சாப்பாட்டை பிடிங்கி சாப்பிட மனோகரி கடுப்பாகிறாள். 

அடுத்து மீண்டும் சாமியாராக வரும் ராமையா மனோகரி தலை மேல் கையை தூங்கி கும்பிடு போட்டு கொண்டு துளசி மாடத்தை சுற்ற வேண்டும் என்று சொல்லி சுற்ற விட சுடர் ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க என்று கேட்க அவ என்னை எல்லாம் கொஞ்சம் நஞ்சமா படுத்தினா என்று சொல்கிறார். தூரத்தில் இருந்து இதையெல்லாம் இந்து பார்த்து விடுகிறாள். 

மேலும் படிக்க | Kalki 2898 AD Movie Review : கல்கி 2898 ஏடி சென்சார் குழுவின் விமர்சனம்! அப்ளாஸ் அள்ளுமா? மன்னை கவ்வுமா?

அதன் பிறகு இந்து தீபாவிடம் சுடர் எதுக்கு மனோகரியை அவ்வளவு கஷ்டப்படுத்துறா என்று கேட்க எனக்கும் அந்த மனோகரி மேல் சந்தேகம் இருக்கு.. அவ நல்லவ மாதிரியே தெரியல என்று சொல்கிறாள், அடுத்து செல்வி சோகமாக உட்கார்ந்திருக்கும் மனோகரியுடம் வந்து எழில் ஐயாவும் இந்துவும் சேர்ந்து வாழ்ந்த 10 வருஷம் நீங்க எங்க போய் இருந்தீங்க என்று கேள்வி கேட்கிறாள். 

இதனால் பயங்கர கோபமடையும் மனோகரி செல்வி கழுத்தை நெரித்து இது மாதிரி கேள்வி எல்லாம் கேக்க கூடாது என்று வார்னிங் கொடுக்கிறாள். அதன் பிறகு நான்கு ரவுடிகள் மனோகரி போட்டோவை காட்டி இவளை பார்த்தீங்களா? என்று விசாரிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | ‘கோட்’ படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா? வாயை பிளக்க வைக்கும் தொகை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News