வெளியானது நேர்கொண்ட பார்வை படத்தின் ‘வானில் இருள்’ பாடல்...!

அஜித் குமார் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் பாடலான ’வானில் இருள்’ வெளியிடப்பட்டுள்ளது!!

Last Updated : Jun 27, 2019, 01:55 PM IST
வெளியானது நேர்கொண்ட பார்வை படத்தின் ‘வானில் இருள்’ பாடல்...! title=

அஜித் குமார் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் பாடலான ’வானில் இருள்’ வெளியிடப்பட்டுள்ளது!!

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான வானில் இருள் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று காலை 7.45 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அறிவிப்பின் படி, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள, வானில் இருள் என்ற வரிகளுடன் கூடிய பாடல் இன்று வெளியானது. உமாதேவி இந்தபாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார். பாடகி தீயின் குரலில் வானில் இருள் பாடல் மிக உருக்கமாக உள்ளது.

 

Trending News