என்னுடைய நடிப்பு எனக்கு திருப்தியை கொடுக்காது - கீர்த்தி சுரேஷ்

என்னுடைய நடிப்பு எப்போதும் எனக்கு திருப்தியை கொடுத்ததில்லை என நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 4, 2022, 09:57 AM IST
  • கீர்த்தி சுரேஷ் பேட்டி
  • கீர்த்தி சுரேஷே அவர் நடித்த படங்களை பார்த்ததில்லை
என்னுடைய நடிப்பு எனக்கு திருப்தியை கொடுக்காது - கீர்த்தி சுரேஷ் title=

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி என்ற படத்துக்காக கடந்த 2019ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றவர்.

இவரது நடிப்பில் சமீபத்தில் தமிழில் சாணிக்காயிதம் படமும், தெலுங்கில் சர்காரு வாரி பாட்டா படமும் வெளியாகின. இதில் சாணிக்காயிதம் படத்தை தியாகராஜ குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார்.

Keerthy

செல்வராகவன் நடிகராக அறிமுகமான இப்படம் அமேசான் ப்ரைமில் வெளியானது. படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பலரது பாராட்டைப் பெற்றது. மேலும் இந்தப் படத்துக்காக கீர்த்தி சுரேஷுக்கு நிறைய விருதுகள் காத்திருக்கின்றன எனவும் ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் தன்னுடைய நடிப்பு தனக்கு எப்போதும் திருப்தியை கொடுத்ததில்லை என நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? பிரியா பவானி சங்கர் ஓபன்டாக்

இதுதொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு கீர்த்தி சுரேஷ்  அளித்த பேட்டி ஒன்றில், “ நடிப்பின் மீது எனக்கு உள்ள ஈடுபாடு காரணமாக இன்னும் நன்றாக செய்ய வேண்டும் என ஒவ்வொரு படத்திற்கு முன்பும் நினைத்துக் கொள்வேன்.  நடிகையாக அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். அதேபோல வணிக ரீதியாகவும் அந்த படங்கள் வெற்றியடைய வேண்டும்.

Suresh

அப்போதுதான் ஒரு நடிகைக்கு உண்மையான திருப்தி கிடைக்கும். வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்தால்தான் எனக்குள் இருக்கும் நடிகையை வெளியே கொண்டு வந்து ரசிகர்களுக்கு காட்ட முடியும்.

மேலும் படிக்க | விக்ரம் படம் எப்படி?: நடிப்பு ராட்சசன்களின் வேற லெவல் வேட்டை

நான் நடித்த படங்களை எப்போதும் நான் பார்க்கவே மாட்டேன். அப்படிப் பார்த்தால் என் நடிப்பில் நிறைய தவறுகள் இருப்பதாக எனக்கு தோன்றும். அதுமட்டுமின்றி இன்னும் நன்றாக நடித்திருக்க வேண்டும் என தோன்றும். என்னுடைய நடிப்பு எப்போதுமே எனக்கு திருப்தியை கொடுத்ததில்லை” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

 

Trending News