சமந்தா- நயன்தாரா சர்ச்சை விவகாரம்! விளக்கம் கொடுத்து முடித்துவைத்த கரன் ஜோஹர்! - என்ன சொன்னார் தெரியுமா?

‘காபி வித் கரன்’ நிகழ்ச்சியில் எழுந்த சமந்தா- நயன்தாரா சர்ச்சை தொடர்பாக அந்நிகழ்ச்சியை நடத்திய கரன் ஜோஹர் விளக்கம் அளித்துள்ளார்.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jul 30, 2022, 06:06 PM IST
  • கரன் ஜோஹர் ‘காபி வித் கரன்’ எனும் நிகழ்ச்சியை நடத்திவருகிறார்.
  • சர்ச்சைக்கு மிகவும் பெயர்போன நிகழ்ச்சி அது
  • அண்மையில் நடிகை சமந்தா கலந்துகொண்டார்
சமந்தா- நயன்தாரா சர்ச்சை விவகாரம்! விளக்கம் கொடுத்து முடித்துவைத்த கரன் ஜோஹர்! - என்ன சொன்னார் தெரியுமா? title=

பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரன் ஜோஹர்,  ‘காபி வித் கரன்’ எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

சர்ச்சைக்கு மிகவும் பெயர்போன நிகழ்ச்சியான இதில் பங்குபெறும் பிரபலங்கள் பலர் ‘பல’ உண்மைகளை உளறிக்கொட்டி சர்ச்சையைச் சந்திப்பது வழக்கம். பரபரப்பும் சர்ச்சையும் நிறைந்த இந்நிகழ்ச்சியில், அண்மையில் நடிகை சமந்தா கலந்துகொண்டார். அதில் நாக சைதன்யாவுடனான விவாகரத்து, ஜீவனாம்ச சர்ச்சை உள்ளிட்ட பல கேள்விகளுக்கு நடிகை சமந்தா பதிலளித்தார்.

அந்த வகையில் இதில் கேட்கப்பட்ட  கேள்வி ஒன்று சர்ச்சையானது.  அதாவது, தென்னிந்தியாவில் டாப் நடிகை என தாங்கள் கருதுவது யாரை என சமந்தாவிடம் கரன் ஜோகர் கேள்வி எழுப்பினார். 

இதற்கான பதிலாக நடிகை நயன்தாராவைக் கைகாட்டிய சமந்தா, அவருடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் படத்தில் தான் நடித்ததயும் சுட்டிக்காட்டினார். ஆனால் சமந்தாவின் அப்பதிலுக்குக் குறுக்கிட்ட கரன் ஜோஹர், தான் வைத்துள்ள பட்டியலில் நயன்தாரா முதலிடத்தில் இல்லை என்றார். இந்தியாவிலேயே சமந்தாதான் முதலிடத்தில் இருக்கிறார் எனவும் கரன் ஜோஹர் குறிப்பிட்டார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

அவரது இந்தப் பதில் சர்ச்சையாக வெடித்தது. வேண்டும் என்றே இழிவுபடுத்திவிட்டதாக நயன்தாராவின் ரசிகர்கள் சிலர் கரன் ஜோஹரை கடுமையாக விமர்சித்தும் வந்தனர். இந்நிலையில் இவ்விவகாரத்தில் கரன் ஜோஹரே தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க  | பள்ளிக்கூடப் பிரச்சினையால் திடீரென நின்றுபோன ஷங்கர் படத்தின் ஷூட்டிங்!

அதில், Ormax Media எனும் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட பட்டியலில் இந்தியாவிலேயே சமந்தாதான் முதலிடத்தில் இருக்கிறார் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அந்தப் பட்டியலின் அடிப்படையில்தான் சமந்தாவிடம் தான் அவ்வாறு கூறியதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

 சமந்தாவுடனான தனது அந்த உரையாடலை நயன்தாராவின் ரசிகர்கள், தவறாக அர்த்தம் புரிந்துகொண்டுவிட்டதாகக் கூறியுள்ள கரன் ஜோஹர், தான் நடத்துவது ஒரு ஃபன் ஷோ  எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க | மீண்டும் சர்ச்சைக்குரிய கதையில் கை வைத்த ‘ஜெய்பீம்’ இயக்குநர்!- எந்த வழக்கு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News