கமல்ஹாசன் கௌதமி பிரிந்தனர்!!

Last Updated : Nov 1, 2016, 05:00 PM IST
கமல்ஹாசன் கௌதமி பிரிந்தனர்!! title=

நடிகை கௌதமி நடிகர் கமல்ஹாசனை பிரிவதாக அறிவித்துள்ளார். 13 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்த அவர்கள் இப்பொழுது பிரிவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக நடிகை கௌதமி தனது இணையதலத்தில் பதிவிட்டுள்ளார், கடந்த 13 வருடங்களாக மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் வாழ்ந்ததாகவும், தற்போது பிரிவதற்காக எடுக்கப்பட்ட முடிவு மிகவும் சிரமமானது என்று கூறிபிட்டுள்ளர். இந்த முடிவை திடீரென எடுக்க முடியவில்லை. மகளின் எதிர்காலம் கருதி இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாவும் கூறியுள்ளார்.

அனுதாபம் தேடுவதோ அல்லது குறை கூறுவதோ, நோக்கம் அல்ல என்றும் மாற்றம் என்பதை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் நடிகை கௌதமி கூறியிரிக்கிறார். 

எந்தவொரு பெண்ணும், அவர் வாழ்நாளில் எடுக்கக்கூடிய கடினமான முடிவு இதுதான். ஆனால், எனக்கு இது தேவையாக இருந்தது. நான் முதலில் ஒரு தாய், எனது மகளுக்கு சிறந்த தாயாக இருக்க விரும்புகிறேன். அதில் நான் சிறப்பாக செயல்பட, நான் முதலில் மன அமைதியுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அவர் வாழ்க்கையின் பல்வேறு கடினமான தருணங்களில் நான் உடன் இருந்து இருக்கிறேன். அவர் படங்களில் உடை வடிவமைப்பாளராக பணியாற்றியபோது பல்வேறு விஷயங்களை கற்று இருக்கிறேன். மேலும் 29 ஆண்டுகால கமலஹாசனுடனான நட்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், தெரிவித்துள்ளார்.

 

 

Trending News