தனுஷ் - செல்வராகவன் இணையும் புதிய படம்!

'ஆயிரத்தில் ஒருவன்-2' படத்திற்கு முன்னதாகவே 'புதுப்பேட்டை-2' படத்தின் பணிகளை இயக்குனர் செல்வராகவன் தொடங்கவுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 20, 2022, 02:11 PM IST
  • 'புதுப்பேட்டை-2' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
  • நானே வருவேன் படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.
  • செல்வராகவன் தற்போது நடிகராகவும் புது அவதாரம் எடுத்துள்ளார்.
தனுஷ் - செல்வராகவன் இணையும் புதிய படம்! title=

பிரபல இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் தற்போது தனுஷை வைத்து இயக்கியுள்ள 'நானே வருவேன்' படத்தின் வெளியிட்டிற்காக காத்துகொண்டு இருக்கிறார்.  இந்த 'நானே வருவேன்' படத்தின் மூலம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன், தம்பி இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். 
அதுமட்டுமின்றி முதன்முறையாக தனுஷ் மற்றும் செல்வராகவன் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், புதுப்பேட்டை-2' மற்றும் ஆயிரத்தில் ஒருவன்-2 ஆகிய படங்களின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து தெரிவித்து இருக்கிறார்.  

மேலும் படிக்க | தளபதி 66 டைட்டில் & பர்ஸ்ட் லுக்! வெளியானது அதிகார்வப்பூர்வ அறிவிப்பு!

அதில் அவர் கூறுகையில்  'ஆயிரத்தில் ஒருவன் -2 ' படத்தின் பணிகளை தொடங்குவதற்கு முன்னதாகவே 'புதுப்பேட்டை-2' படத்தை இயக்கவிருப்பதாக இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே 2020ல் 'புதுப்பேட்டை 2' படத்திற்கான பணிகளை தொடங்கவிருப்பதாகவும், 2021 ஆம் ஆண்டில் 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தில் பணிகளில் ஈடுபட இருப்பதாகவும், அதில் தனுஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இயக்குனர் செல்வராகவன் கூறியிருந்தார்.  இந்த இரண்டு படங்களும் 2024ல் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் நடித்த 'புதுப்பேட்டை' படம் 2006ம் ஆண்டும், கார்த்தி நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' 2010ம் ஆண்டும்  வெளியானது.  இந்த இரண்டு தமிழ் படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.  இப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.  இருப்பினும் எப்போது 'புதுப்பேட்டை 2' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன் 2' படங்களின் பணிகள் தொடங்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.  செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் வேலைகள் முடிந்தவுடன் இந்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | VTV, ராட்சசன் படத்தில் நடிக்க வேண்டியது நான்தான் - நடிகர் ஜெய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News