பிக்பாஸ்7 : டபுள் எவிக்ஷனில் வெளியேறிய பிராவோ-அக்‌ஷயா! வாங்கிய சம்பளம் எவ்வளவு?

Bigg Boss 7 Tamil: பரபரப்பாக நடைப்பெற்று வரும் பிக்பாஸ் போட்டியில் டபுள் எவிக்ஷன் மூலமாக ஆர்.ஜே.பிராவோ மற்றும் அக்ஷயா ஆகியோர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டனர். 

Written by - Yuvashree | Last Updated : Nov 27, 2023, 02:29 PM IST
  • பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட்..
  • இந்த வாரம் ஆர்.ஜே.பிராவோ மற்றும் அக்‌ஷ்யா வெளியேற்றப்பட்டனர்..
  • இவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம்..
பிக்பாஸ்7 : டபுள் எவிக்ஷனில் வெளியேறிய பிராவோ-அக்‌ஷயா! வாங்கிய சம்பளம் எவ்வளவு?  title=

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே அதிக அளவு ரசிகர்களை கொண்டுள்ள நிகழ்ச்சி, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது. 

பிக்பாஸ் சிசன் 7:

ஆங்கிலத்தில் பிக்பிரதர் என்ற பெயரில் நடைப்பெற்று வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை, 2007ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் என்ற பெயரில் இந்திய தொலைக்காட்சிகள் நடத்தி வருகின்றன. வட இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த இந்த நிகழ்ச்சி, 2017ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்டது. மெல்ல மெல்ல பிற தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. பலமான போட்டியாளர்கள் பலருடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில பல ட்விஸ்டுகள் நடந்தது. புது ரூல்ஸ், பிக்பாஸ் வீட்டிற்குள் ஸ்மால் பாஸ் என்ற பெயரில் இன்னொரு வீடு, புதுப்புது டாஸ்குகள் என பல புது விஷயங்கள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டன. 

டபுள் எவிக்ஷன்..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில்தான் முதன்முறையாக டபுள் எவிக்ஷன் நடந்தது. முதன் முறையாக நடந்த இந்த எவிக்ஷனில் குறைவாக வாக்கு பெற்ற யுகேந்திரன் மற்றும் வினுஷா தேவி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, இந்த வாரமும் இரண்டு எவிக்ஷன்கள் நடந்தது. அதில், ஆர்.ஜே.பிராவோ மற்றும் அக்ஷயா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். 

மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டில் செம ரொமான்ஸ்! போர்வைக்குள் காதல் லீலைகள்-வைரலாகும் வீடியோ!

சம்பள விவரம்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும், அவர்கள் அந்த இல்லத்தில் இருக்கும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட தொகை கொடுக்கப்படும். அவர்கள் எத்தனை நாட்கள் அந்த வீட்டில் இருக்கிறார்களோ, அத்தனை நாட்களுக்கும் கணக்கு போட்டு பெரிய தொகையை அவர்களுக்கு காெடுப்பர். அதன்படி, நடிகை அக்ஷயா, பிக்பாஸ் வீட்டில் 54 நாட்கள் இருந்துள்ளார். இவருக்கு மொத்தமாக ரூ.10 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்.ஜே.பிராவாே, பிக்பாஸ் போட்டி தொடங்கி சில வாரங்கள் கழித்துதான் வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இவர், ஒரு நாளைக்கு ரூ.18 ஆயிரம் வரை சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இவருக்கு மொத்தமாக ரூ.8 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். 

இரண்டாவது வைல்ட் கார்ட் எண்ட்ரி..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் 5 போட்டியாளர்கள் நுழைந்தனர். வி.ஜே.அர்ச்சனா, ஆர்.ஜே.பிராவோ, தினேஷ், கானா பாலா, அன்னபாரதி ஆகியோரில், வந்த வாரமே ஒருவர் வெளியேற்றப்பட்டார். அடுத்தடுத்த வாரத்தில் கானா பாலா, ஆர்.ஜே.பிராவோ ஆகியோர் வெளியேறினர். தற்போது அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகியோர் மட்டும் பிக்பாஸ் வீட்டில் நிலைத்து நிற்கின்றனர். இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் இரண்டு பேர் எண்ட்ரி கொடுத்தனர். வந்த முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்ட அனன்யா ராவ் மற்றும் விஜய் வர்மா ஆகியோர்தான் அந்த வைல்ட் கார்ட் போட்டியாளர்கள். மூன்றாவதாக வினுஷா தேவி வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பிக்பாஸிற்குள் நுழையும் ஐடியாவே இல்லை என்று கூறிவிட்டார். இதையடுத்து, வெளியேற்றப்பட்டு மீண்டும் இந்த வீட்டிற்குள் வந்திருக்கும் அனன்யா மற்றும் விஜய்யால் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 

மேலும் படிக்க | தடபுடலாக நடந்த ராதா மகளின் திருமணம்..கொடுக்கப்பட்ட வரதட்சணை எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News