திருமண விவகாரத்துக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்த சிம்பு

தனக்கு திருமணம் எப்போது என்பது குறித்த கேள்விக்கு நடிகர் சிம்பு விளக்கமளித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 11, 2022, 01:39 PM IST
  • வெந்து தணிந்தது காடு செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ்
  • படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடந்துவருகின்றன
  • சிம்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்
திருமண விவகாரத்துக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்த சிம்பு title=

சினிமாவில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த சிம்பு மாநாடு படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அதனையடுத்து அவர் பல படங்களில் நடித்துவருகிறார். அந்தவகையில் விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் இயக்குநர் கௌதம் வாசுதேவுடன் மீண்டும் இணைந்துள்ளார். அப்படத்துக்கு வெந்து தணிந்தது காடு என்று பெயரிடப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை தழுவி எடுக்கப்படும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இரண்டு சிங்கிள்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. 

படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி நடந்தது. அதில் சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ராதிகா ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர். ட்ரெய்லரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Simbu

படம் வெளியாக இன்னும் 4 நாள்களே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. எப்போதும் ப்ரோமோஷன்களில் பெரிதாக தலை காட்டாத சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு ப்ரோமோஷனில் கலந்துகொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாநாடு படம் வித்தியாசமான முயற்சியில் வந்து வெற்றிய பெற்றது. மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. அதுபோல் இன்னொரு மாறுபட்ட கதை அம்சத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் நான் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் தயாராகி உள்ளது.

சினிமாத்தனமாக இல்லாமல் யதார்த்தமான படமாக இருக்கும். இதில் 3 தோற்றங்களில் வருகிறேன். 19 வயது இளைஞனாகவும் என்னை உருமாற்றி நடித்துள்ளேன். ரசிகர்களுக்கு பிடித்த அம்சங்கள் படத்தில் உள்ளன. இது வெற்றி பெற்றால் 2-ம் பாகமும் வரும். ஒரு படத்தில் பல கதாநாயகர்கள் நடிப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் படத்துக்கு மேலும் வரவேற்பு கிடைக்கும். ரஜினி, அஜித்குமார், விஜய் என்று யாருடன் வேண்டுமானாலும் இணைந்து நடிக்க நான் தயாராக இருக்கிறேன்.

 

எனது திருமணம் குறித்து யோசித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அது நடக்கிற நேரத்தில் நடக்கும். நிறைய 2-வது, மூன்றாவது திருமணங்கள் நடக்கின்றன. சிலர் காதலித்து விட்டு பிறகு பிரிகிறார்கள். விவாகரத்துகளும் நடக்கின்றன. இதில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. எனவே இதுமாதிரி பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க நல்ல மணப்பெண் அமைய காத்து இருப்பதில் தவறு இல்லை. நல்ல மணப்பெண்ணுக்காக காத்து இருக்கிறேன். ஒரு படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்.

மேலும் படிக்க | கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தின் ரன்-டைம் எவ்வளவு தெரியுமா?

முத்த காட்சிகள், புகைப்பிடிக்கும் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் போன்றவற்றை எனது படங்களில் திணிக்க கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். விரைவில் படம் டைரக்டு செய்வேன். இதற்காக 10 கதைகள் தயார் செய்து வைத்துள்ளேன்" என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News