இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி: 1 ஜனவரி முதல் மாறுகிறது முக்கிய விதி

இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு வரம்பிற்கு மேல் அதிகமான தொகையை எடுப்பதற்கும் டெபாசிட் செய்வதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 25, 2021, 04:09 PM IST
  • புத்தாண்டில் நம் அன்றாட வாழ்க்கையின் பல விதிகள் மாறவுள்ளன.
  • IPPB-யில் மூன்று வகையான சேமிப்புக் கணக்குகள் திறக்கப்பட்டுகின்றன.
  • அடிப்படை சேமிப்புக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு கட்டணம் ஏதும் இல்லை.
இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி: 1 ஜனவரி முதல் மாறுகிறது முக்கிய விதி  title=

புதுடெல்லி: நாம் ஆண்டின் கடைசி மாதத்தில் இருக்கிறோம். சில நாட்களுக்குப் பிறகு, புதிய ஆண்டு 2022 தொடங்கவுள்ளது. அப்போது நம் அன்றாட வாழ்க்கையின் பல விதிகளும் மாறவுள்ளன. 

இந்த வரிசையில், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் (India Post Payments Bank -IPPB) வாடிக்கையாளர்களும் அதிர்ச்சியடையப் போகிறார்கள். இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு வரம்பிற்கு மேல் அதிகமான தொகையை எடுப்பதற்கும் டெபாசிட் செய்வதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த விதி வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வங்கி இந்த தகவலை அளித்துள்ளது

IPPB-யில் மூன்று வகையான சேமிப்புக் கணக்குகள் திறக்கப்பட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கியில் (Banks) பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அளித்த தகவலின்படி, அடிப்படை சேமிப்புக் கணக்கில் இருந்து ஒவ்வொரு மாதமும் நான்கு முறை பணம் எடுப்பது இலவசமாக இருக்கும். ஆனால் இதற்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் குறைந்தபட்சம் ரூ.25 செலுத்த வேண்டும். அடிப்படை சேமிப்புக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு கட்டணம் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | Bank Facility: வங்கிக் கணக்கில் பணமே இல்லை! ஆனாலும் பணம் எடுக்கலாம்! 

எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்?

இந்த வங்கியில் சேமிப்பு (Savings Account) மற்றும் நடப்புக் கணக்குகளில் ஒரு மாதத்தில் ரூ.10,000 வரை டெபாசிட் செய்வதற்கு கட்டணம் ஏதும் இல்லை. இந்த வரம்பை விட அதிகமாக டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என வங்கி தெரிவித்துள்ளது. 

அடிப்படை சேமிப்புக் கணக்கைத் தவிர மற்ற சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கிலிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.25,000 வரை எடுக்க கட்டணம் ஏதுமில்லை. அதே சமயம், இலவச வரம்பிற்குப் பிறகு ஒவ்வொரு முறையும் நீங்கள் பணம் எடுக்கும்போது, ​​குறைந்தபட்சம் 25 ரூபாய் வசூலிக்கப்படும்.

IPPB இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, இந்த விதிகள் அனைத்தும் ஜனவரி 1, 2022 முதல் பொருந்தும். அதாவது ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமான பணத்தை எடுக்க (Bank Transaction), அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஜிஎஸ்டி/செஸ் தனியாக விதிக்கப்படும். 

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி இதற்கு முன்பு ஆகஸ்ட் 1, 2021 அன்று டோர் ஸ்டெப் பேங்கிங் கட்டணங்களின் (Doorstep banking charges) புதிய விகிதங்களை அமல்படுத்தியது.

ALSO READ | Rules Change: மாறும் விதிகள்! புத்தாண்டில் தபால் நிலைய வங்கியின் கட்டணங்கள் உயர்கிறது 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News