புதன் வக்ர பெயர்ச்சி; இந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலம் ஆரம்பம்

இன்று முதல் அதாவது மே 10ம் தேதி முதல் புதன் கிரகம் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணிக்க ஆரம்பிப்பார். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 10, 2022, 09:32 AM IST
  • புதன் வக்ர பெயர்ச்சி சுபப் பலன்களை தரும்
  • இன்று முதல் ரிஷப ராசியில் புதன் வக்ர பெயர்ச்சி
  • 5 ராசிக்காரர்களுக்கு மோசமான விளைவை
புதன் வக்ர பெயர்ச்சி; இந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலம் ஆரம்பம் title=

புதன் வக்ர பெயர்ச்சி: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் தலைகீழ் இயக்கத்தின் தாக்கம் 12 ராசியிலும் காணப்படும். மேலும் இந்த மாற்றங்கள் அனைத்தும் மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. செல்வம், புத்திசாலித்தனம், வியாபாரம் போன்றவற்றுக்கு காரணமானக இருப்பவர் புதன் கிரகம். 

இந்த நிலையில் இன்று முதல் அதாவது மே 10 ஆம் தேதி ரிஷப ராசியில் வக்ர நிலையில் புதன் கிரகம் பயணிக்க ஆரம்பித்துள்ளார், மேலும் ஜூன் 3 ஆம் தேதி வக்ர நிவர்த்தியாகி முற்போக்கு நிலையில் மாறி பயணிப்பார். இந்த மாற்றங்கள் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலனையும், தீய விளைவுகளையும் ஏற்படுத்தி தரும்.

மேலும் படிக்க | செவ்வாய் - சனி கூட்டணி: மே 17 வரை சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 3 ராசிகள் 

ஒரு கிரகம் எப்பொழுது பிற்போக்கு நிலையில் இருக்கிறதோ, அதாவது, அது எதிர் திசையில் நகரத் தொடங்கும் போது, ​​அதன் தாக்கத்தின் தீவிரம் அதிகரிக்கிறது. அதனால்தான் கோள்களின் தலைகீழ் இயக்கத்தைக் கண்டு மக்கள் அதிகம் பயப்படுகிறார்கள். இருப்பினும், கிரகங்களின் தலைகீழ் இயக்கம் ஒரு அசுப விளைவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அது மங்களகரமானது என்பதை நிரூபிக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள புதனின் பிற்போக்கு இயக்கத்தால், எந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலத்தை தரப்போகிறது என்பதை காணலாம். 

இந்த ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சி சுபப் பலன்களை தரும்

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பெயர்ச்சி அற்புத பலன்களைத் தருவார். புதிய வேலை, பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பெரிய சாதனைகளை அடைய முடியும். மரியாதை அதிகரிக்கும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பெயர்ச்சி வருமானத்தை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணம் வரவு சாதகமாக அமையும். உங்கள் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பவர்களுடனான உறவுகள் சிறப்பாக இருக்கும்.

மீனம்: தனின் வக்ர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்குப் பல வகைகளில் நன்மை தரும். தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும். முதலீடு சாதகமாக இருக்கும். மொத்தத்தில், இந்த நேரம் உங்களுக்கு நிதி பலம் தரும்.

இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்
ரிஷப ராசியில் புதன் வக்ர பெயர்ச்சி ஏற்படுவதால் 5 ராசிக்காரர்களுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். இந்த ராசிகள் மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ஆகும். இவர்களுக்கு எதிர்மறையான பலன் காரணமாக, கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவது சிரமம் என்றே கூறலாம். வீண் செலவுகள் கூடும். திருமண வாழ்க்கையில் சண்டைகள் ஏற்படும். இந்த நேரத்தில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடும், பல அதிசயங்கள் நடக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News