செவ்வாய்ப் பெயர்ச்சி: இந்த ‘4’ ராசிகள் காட்டில் பண மழை தான்!

ஜோதிடத்தில், செவ்வாய் கிரகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய் சிவப்பு நிறத்துடன் தொடர்புடையது. இது நெருப்பு மற்றும் கோபத்தின் காரணியாகும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 14, 2022, 04:18 PM IST
  • வேலை மாற்றம், சம்பள உயர்வு ஏற்படும்.
  • பயணத்தினால் பொருளாதார நன்மைகள் ஏற்படும்
  • செவ்வாயின் அருளால் அதிர்ஷ்ட காற்று வீசும்.
செவ்வாய்ப் பெயர்ச்சி: இந்த ‘4’ ராசிகள் காட்டில் பண மழை தான்! title=

ஜோதிடத்தில், செவ்வாய் கிரகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய் சிவப்பு நிறத்துடன் தொடர்புடையது. இது நெருப்பு மற்றும் கோபத்தின் காரணியாகும். அதனால் தான் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. பிப்ரவரி 26ம் தேதி சனிக்கிழமையன்று செவ்வாய் மகர ராசிக்குள் நுழைகிறார். செவ்வாயின் இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களின் ஜாதகத்தில் செவ்வாய் 10ஆம் வீட்டில் நுழைவார். பத்தாவது வீடு கர்ம பாவம் என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் பெயர்ச்சி தொழிலில் முன்னேற்றம் தரும். இத்துடன் வேலையில் பதவி உயர்வுக்கான பாதையும் திறக்கும். இது தவிர, பண ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்பும் உள்ளது. பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். இந்த ராசிக்காரர்கள், வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்வது நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | Personality by Zodiac Sign: தங்கள் தலைவிதியை மாற்றும் திறன் பெற்ற ‘5’ ராசிகள்..!!

ரிஷபம்

செவ்வாய் ரிஷப ராசிக்கு 9வது வீட்டில் சஞ்சரிக்கிறார். ஜாதகத்தின் ஒன்பதாம் வீடு அதிர்ஷ்ட ஸ்தானம். அப்படிப்பட்ட நிலையில் செவ்வாy பெயர்ச்சியினால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.  எந்த வேலை செய்தாலும் அமோக வெற்றி கிடைக்கும். தொழில் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். 

தனுசு

தனுசு ராசியின் இரண்டாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பார். பண வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் திடீர் பணவரவு ஏற்படும். மாணவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட பணிகள் முடிவடையும். உத்யோகத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழிலில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

செவ்வாய் 11ம் இடமான மீனத்தில் சஞ்சரிக்கிறார். இந்த செவ்வாய் சஞ்சாரத்தின் போது நிதி நிலை வலுவாக இருக்கும். செவ்வாய்ப் பெயர்ச்சி காலத்தில் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இது தவிர, வணிகத்தில் நிதிப் பக்கம் வலுவாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News