இந்தியாவின் அதிவேகமான ரயில் ''வந்தே பாரத் எக்ஸ்ப்ரஸ்''!!

நாட்டின் உருவாக்கப்பட்டுள்ள அதிக வேக ரயில் 18 ரக ரயிலுக்கு 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என பெயர் சூட்டப்படுவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 27, 2019, 05:46 PM IST
இந்தியாவின் அதிவேகமான ரயில் ''வந்தே பாரத் எக்ஸ்ப்ரஸ்''!! title=

நாட்டின் உருவாக்கப்பட்டுள்ள அதிக வேக ரயில் 18 ரக ரயிலுக்கு 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என பெயர் சூட்டப்படுவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

டெல்லியிலிருந்து வாரணாசிக்கு 160 கி.மீ.வேகத்தில் செல்லக்கூடிய உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட இந்த ரயில் தயாரிக்க ரூ.97 கோடி செலவாகியுள்ளது. இந்த ரயிலுக்கு புதிய பெயர்சூட்டப்பட்டதுள்ளது. இது குறித்து ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் வெளியிட்ட அறிக்கையில்.,

இந்த ரயில் நாட்டிலேயே அதிகவேகமாக செல்லக்கூடியது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் கடந்த 18 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் என்ஜின் இல்லாமல் முதன்முதல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது முழுக்கமுழுக்க குளிர்சாதன வசதி கொண்டது. இந்த ரயில் இரண்டு பெட்டிகளில் சொகுசு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.  இந்த ரயில் கான்பூர் மற்றும் அலகாபாத் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

இந்த ரயில் மேட் இன் இந்தியா ரயில் ஆகும். இந்த 'ரயில் 18' ரக ரயிலுக்கு பொதுமக்கள் பல்வேறு பெயர்களை பரிந்துரை செய்தனர். ஆனால் நாம் முடிவாக 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என பெயர் சூட்டி குடியரசு தின பரிசாக மக்களுக்கு வழங்குகிறோம். இந்த ரயிலை விரைவில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைப்பதார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News