இந்தியாவின் 100வது செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது!

இந்த பிஎஸ்எல்வி சி-38 செயற்கைகோள் இன்று காலை 9:28 மணிக்கு ஏவப்படும். இதற்கான கவுண்டவுன் நேற்று துவங்கிவிட்டது.

Last Updated : Jan 12, 2018, 09:03 AM IST
இந்தியாவின் 100வது செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது! title=

இந்தியாவின் 100வது செயற்கைக்கோள் இஸ்ரோவால் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-38 மூலம் இந்த செயற்கைகோள் ஏவப்படுகிறது.

பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. இந்த ராக்கெட் கார்டோசாட் -2 செயற்கைக்கோளைத் தாங்கிச்செல்லும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இது இந்தியாவின் 100வது செயற்கைகோள் ஆகும்.

இந்த பிஎஸ்எல்வி சி-38 செயற்கைகோள் இன்று காலை 9:28 மணிக்கு ஏவப்படும். இதற்கான கவுண்டவுன் நேற்று துவங்கிவிட்டது.

பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட்டில் மூலம் கனடா, கொரியா, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியாமற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள்கள் ஏவப்படுகிறது. மொத்தமாக 31 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட உள்ளது.

Trending News