ரயில் உணவு குறித்து முக்கிய அப்டேட், உடனே இதை படியுங்கள்

Indian Railways: சுத்தமான சைவ உணவு உண்பவர்களுக்காக ரயில்வேயில் புதிய முறை தொடங்கப்பட்டுள்ளது. உங்களுக்கும் இதே போன்ற பிரச்சனை இருந்தால், இந்த செய்தி நிச்சயம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 15, 2022, 03:45 PM IST
  • ரயிலில் உணவு தொடர்பான பெரிய அப்டேட்.
  • ரயில்வே அமைச்சகம் புதிய உத்தரவு.
  • இந்திய ரயில்வேயின் சாத்வீக உணவு சேவை.
ரயில் உணவு குறித்து முக்கிய அப்டேட், உடனே இதை படியுங்கள் title=

இந்திய ரயில்வேயின் சாத்வீக உணவு சேவை: ரயிலில் நீண்ட பயணத்தின் போது, ​​பயணிகள் முன் அடிக்கடி உணவு, பானங்கள் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் பல நேரங்களில் மக்கள் தங்களின் வீட்டில் சமைத்த உணவை எடுத்துச் செல்வதை ஆம் காணலாம். ஆனால் அப்படி செய்ய முடியாதவர்களின் நிலை என்ன? எனவே, சுத்தமான சைவ உணவு (சாத்வீக உணவு) உண்பவர்களுக்காக ரயில்வேயில் புதிய ஏற்பாடு தொடங்கப்பட்டுள்ளது. உங்களுக்கும் இது போன்ற பிரச்சனைகள் இருந்தால், இந்த செய்தி நிச்சயம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அதன்படி ரயில்வே அமைச்சகத்தின் புதிய உத்தரவுக்குப் பிறகு, இனி பயணிகள் பயணத்தின் போது முற்றிலும் சாத்வீக உணவைப் பெற முடியும்.

இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான IRCTC, பயணத்தின் போது பயணிகளுக்கு சாத்வீக உணவை வழங்க இஸ்கானுடன் கைகோர்த்துள்ளது. இதன் கீழ், சாத்வீக உணவு உண்ணும் பயணிகளுக்கு, இஸ்கான் கோவிலின் கோவிந்தா ரெஸ்டோரன்ட் என்ற உணவகத்தில் உணவு ஆர்டர் செய்த பின், அவர்களது இருக்கைகளுக்கு டெலிவரி செய்யப்படும். IRCTC மற்றும் ISKCON இடையேயான இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்த சேவை தற்போது டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையத்தில் கிடைக்கிறது.

மேலும் படிக்க | 500 ரூபாய் நோட்டு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

இந்த நிலையில் நீண்ட தூர பயணம் செல்லும் பயணிகள் (வெங்காயம், பூண்டு சாப்பிடாத பயணிகள்) பேண்ட்ரி காரில் இருந்து கிடைக்கும் உணவை தவிர்க்கின்றனர். ஆனால் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அத்தகைய பயணிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

எனவே நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் ரயில் பயணத்தின் போது சாத்வீக உணவை சாப்பிட விரும்பினால், ஐஆர்சிடிசி இ-கேட்டரிங் இணையதளம் அல்லது ஃபுட் ஆன் ட்ராக் செயலியில் உணவை முன்பதிவு செய்ய வேண்டும். இதற்கு, ரயில் புறப்படுவதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக PNR எண்ணுடன் ஆர்டர் செய்ய வேண்டும். ஆர்டர் செய்த பிறகு, உணவு உங்கள் இருக்கைக்கு வந்து சேரும். 

இதற்கிடையில் கோவிந்தா உணவகம் வழங்கும் உணவில், பயணிகளுக்கு ஓல்ட் டெல்லியின் வெஜ் பிரியாணி, டீலக்ஸ் தாலி, மகாராஜா தாலி, தால் மக்கானி, பனீர் உணவுகள், நூடுல்ஸ் மற்றும் பிற சாத்வீக உணவுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கள்ளநோட்டுகள் அதிகரிப்பு! 2021ல் கைப்பற்றப்பட்ட போலி நோட்டுகளில் 60% 2000 தாள்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News