Airport Recruitment 2022: ரூ.1 லட்சம் வரை சம்பளத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!

Airport Recruitment 2022: ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனமானது ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.1 லட்சம் வரை ஊதியத்தில் பணியாளர்களை நியமிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 20, 2022, 10:40 AM IST
Airport Recruitment 2022: ரூ.1 லட்சம் வரை சம்பளத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு! title=

Airport Recruitment 2022: ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனமானது ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.1 லட்சம் வரை ஊதியத்தில் பணியாளர்களை நியமிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1) நிறுவனம் :

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா 

2) இடம் :

ராஜீவ் காந்தி பவன், நியூ டெல்லி 

மேலும் படிக்க | JOB Openings: ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தில் வேலை ரெடி: அப்ளை பண்ன நீங்க ரெடியா

3) வேலைவகை :

ஒப்பந்த அடிப்படை ( 1 வருடம் )

4) பணிகள் :

Consultants

5)  கல்வி தகுதிகள் :

MBBS டிகிரி படித்திருக்க வேண்டும், அது இந்திய கவுன்சில் அல்லது மாநில கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.  ஏவியேஷன் மெடிசினில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

6) பணிக்கான முன் அனுபவம் :

DGCA Medical Assessor பதவியில் ஓராண்டுகாலம் பதவி வகித்திருக்க வேண்டும் அல்லது  IAM/AFCME/MEC(E) அல்லது DGCA அங்கீகரிக்கப்பட்ட வகுப்பு I மருத்துவப் பரீட்சை மையத்தில் ஓராண்டு பதவிக்காலம் அல்லது DGCA-ல் 3 வருட அனுபவம் எம்பேனல் வகுப்பு II அல்லது வகுப்பு III மருத்துவ பரிசோதகர் அல்லது சிவில் விமான போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகள், கொள்கைகள் மற்றும் வகுப்பு III மருத்துவ சான்றிதழ் தொடர்பான நடைமுறைகள் பற்றிய விரிவான அறிவு மற்றும் புரிதல் இருக்க வேண்டும்.

7) பணிக்கான இதர தகுதிகள் :

- E9, E8, மற்றும் E7 அல்லது E6 நிலையிலிருந்து ஓய்வுபெற்ற பொதுத்துறை நிறுவன ஊழியர் மற்றும் மத்திய அரசிடமிருந்து சமமானவர் அல்லது மாநில அரசு அல்லது சம்பந்தப்பட்ட துறையில் முறையே குறைந்தபட்சம் 20 ஆண்டுகள், 15 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட பாதுகாப்பு அல்லது துணை ராணுவப் படைகள் அல்லது புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

- ஒரு ஆலோசகராக ஈடுபடுவதற்கு முன், ஓய்வு பெற்ற பிறகு ஒரு cooling period காலம் தேவைப்படுகிறது.

- தகுதியான நபர்கள் ஓய்வுபெறும் போது விஜிலென்ஸ் அல்லது Disciplinary-ல் ஒழுங்காக இருக்க வேண்டும்.
 
- தகுதியான விண்ணப்பதாரருக்கு எதிராக எந்த கிரிமினல் வழக்கும் நிலுவையில் இருக்கக்கூடாது.

8) சம்பளம் :

20 ஆண்டுகள், 15 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களுக்கு முறையே ரூ.1,00,000, ரூ.85,000 மற்றும் ரூ.75,000 என மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும்.

9) விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பங்களை பதிவிறக்கி chqrectt@aai.aero என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

10) தேர்வு செய்யப்படும் முறை :

நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

11) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :

25/07/2022

மேலும் படிக்க | 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News