பழனி முருகன் கோவிலில் கூடுதல் பாதுகாப்பு!

டிசம்பர்.,6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தி உள்ளனர். 

Last Updated : Dec 5, 2017, 09:38 AM IST
பழனி முருகன் கோவிலில் கூடுதல் பாதுகாப்பு! title=

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

இதையடுத்து, டிசம்பர்.,6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் அமைத்துள்ளனர். மலைக்கு செல்லும் பக்தர்கள் கொண்டு செல்லும் பைகளை சோதனை செய்தே அனுப்புகின்றனர். 

மேலும், மக்கள் அதிகம் நடமாடும் இடங்களான பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை மசூது இடிப்பு தினத்தை முன்னிட்டு சமூகவிரோதிகள் தாக்குதலில் ஈடுபடலாம் என்று இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Trending News