7th Pay Commission: டிஏ அரியர் பற்றிய முக்கிய செய்தி, ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறுமா?

7th Pay Commission: மோடி அரசு ஊழியர்களுக்கு 1.5 ஆண்டுகள் அதாவது 18 மாத கால அகவிலைப்படி அரியர் தொகையை ஒரே வேளையில், ஒட்டுமொத்தமாக வழங்கக்கூடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 11, 2022, 10:02 AM IST
  • 18 மாத கால நிலுவைத் தொகையை ஒன்றாக அளிக்கவுள்ளதா அரசு?
  • ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியை அரியர் தொகையை வழங்க வேண்டும்: மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை.
  • இந்த தொகை சுமார் ரூ.2 லட்சம் வரை இருக்கும்.
7th Pay Commission: டிஏ அரியர் பற்றிய முக்கிய செய்தி, ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறுமா? title=

7வது ஊதியக்குழு புதுப்பிப்புகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படி அரியர் தொகை குறித்து மோடி அரசிடமிருந்து ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. ஊடகச் செய்திகளின்படி, மோடி அரசு ஊழியர்களுக்கு 1.5 ஆண்டுகள் அதாவது 18 மாத கால நிலுவைத் தொகையை ஒரே வேளையில், ஒட்டுமொத்தமாக வழங்கக்கூடும். இந்த தொகை சுமார் ரூ.2 லட்சம் வரை இருக்கும். எனினும், இது குறித்து அரசிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை.

மத்திய அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்

ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி அரியர் தொகையை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், அகவிலைப்படி நிலுவையைத் தொகையை வழங்க அரசு பரிசீலித்து விரைவில் தீர்வு காணப்படும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். 

ஜேசிஎம் தேசிய கவுன்சிலின் செயலாளர் (பணியாளர்கள் தரப்பு) ஷிவ் கோபால் மிஸ்ரா கூறுகையில், 'கவுன்சில் அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளது, ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.' என்றார். இது தொடர்பில் அமைச்சரவை செயலாளருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் படிக்க | இந்த ஊழியர்கள்ளுக்கு அடித்தது ஜாக்பாட்: அகவிலைப்படியை 3% அதிகரித்தது அரசு 

அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம்

மிஸ்ராவின் கூற்றுப்படி, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) மற்றும் நிதி அமைச்சகம், செலவினத் துறை அதிகாரிகளுடன் ஜெ.சி.எம்-இன் கூட்டு சந்திப்பு விரைவில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விரைவில் முடிவு எடுக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுவாக டிஏ ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கப்படும். இம்முறை ஜனவரி மாதம் நடைபெறும் அகவிலைப்படி உயர்வு இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தியது. ஜனவரி 2022-க்கு டிஏ 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அப்படி நடந்தால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதமாக உயரும்.

அகவிலைப்படி அரியர் தொகை எவ்வளவு கிடைக்கும்? 

வரும் கூட்டத்தில் 18 மாத அகவிலைப்படி அரியர் தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டால், லெவல்-1 ஊழியர்களுக்கு ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை கிடைக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல, லெவல்-13 பணியாளர்கள் ஒரே நேரத்தில் ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை பெறக்கூடும்.

மேலும் படிக்க | 7th Pay Commission முக்கிய செய்தி: அகவிலைப்படி 34% ஆவது உறுதியானது, அறிவிப்பு எப்போது? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News