2500 ரூபாயில் கொரோனா வைரஸ் சோதனை செய்யப்படும்.. விலையை நிர்ணயித்த உ.பி அரசு

உ.பி மாநிலத்தின் யோகி அரசு கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. இப்போது தனியார் ஆய்வகங்கள் ஒரு கட்ட சோதனைக்கு ரூ .4500 வரை வசூலிக்கப்படுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 24, 2020, 11:14 PM IST
2500 ரூபாயில் கொரோனா வைரஸ் சோதனை செய்யப்படும்.. விலையை நிர்ணயித்த உ.பி அரசு title=

கொரோனா வைரஸ் சோதனை: நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை 23,077 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ஐ.சி.எம்.ஆர் சான்றளிக்கப்பட்ட கொரோனா சோதனை ஆய்வகத்தில் சோதனைக் கட்டணத்தை உத்தரபிரதேச அரசு நிர்ணயித்துள்ளது. அரசாங்க உத்தரவின்படி, கோவிட் 19 இன் ஒரு கட்ட பரிசோதனைக்கு 2500 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.

தனிப்பட்ட முறையில் ஐ.சி.எம்.ஆர் கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை. இது தனியார் ஆய்வகத்தை ஆய்வு செய்ய அனுமதித்தது. அதனால்தான் உ.பி மாநிலத்தின் யோகி அரசு கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. இப்போது தனியார் ஆய்வகங்கள் ஒரு கட்ட சோதனைக்கு ரூ .4500 வரை வசூலிக்கப்படுகின்றன.

உத்தரபிரதேச அரசின் முதன்மை செயலாளர் (மருத்துவம்) அமித் மோகன் பிறப்பித்த உத்தரவின்படி, ஒரு ஆய்வகம் முதல் கட்ட சோதனைக்கு இதை விட அதிகமாக கட்டணம் வசூலித்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். முதல் கட்ட சோதனையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐ.சி.எம்.ஆர் 87 ஆய்வகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வகங்கள் கொரோனா வைரஸின் பரிசோதனையை மேற்கொள்ளும். 

ஐ.சி.எம்.ஆர் படி, இந்த ஆய்வகம் நாட்டின் 15 மாநிலங்களில் அமைந்துள்ளது. அவற்றில், மகாராஷ்டிராவில் அதிகமகா 20 ஆய்வகங்கள் உள்ளன. அதைத் தொடர்ந்து தெலுங்கானாவில் 12, டெல்லியில் 11, தமிழ்நாட்டில் 10, ஹரியானாவில் 7, மேற்கு வங்காளத்தில் 6, கர்நாடகாவில் 5, குஜராத்தில் 4, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 2-2 ஆய்வகங்கள் உள்ளன. உத்தரகண்ட் மற்றும் ஒடிசாவில் தலா 1-1 ஆய்வகங்கள் உள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 718 பேர் இறந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி, இதுவரை 1510 பேர் உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதில் 206 பேர் சிகிச்சையின் பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இங்கு 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை 514 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. 103 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 15 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா நோயில் இருந்து 866 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 114 பேர் தமிழகத்தில் குணமடைந்துள்ளனர். அதேநேரத்தில் இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது எனவும் கூறப்பட்டு உள்ளது.

Trending News