J&K குல்கம்: பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுகொலை...

ஜம்முவின் குல்கம் பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே நடக்கும் மோதல் சம்பவத்தில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்! 

Last Updated : Jan 13, 2019, 10:02 AM IST
J&K குல்கம்: பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுகொலை... title=

ஜம்முவின் குல்கம் பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே நடக்கும் மோதல் சம்பவத்தில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்! 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச்சண்டையில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள காடாபூரா பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, இந்திய ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதிக்கு விரைந்து வந்த இராணுவம், பொலிஸ் மற்றும் CRPF கூட்டு முயற்சியில் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். 

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப்படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவர்களிடம் இருந்து வேடின்குண்டு பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர். 

மேலும், சுட்டுகொல்லப்பட தீவிரவாதிகள் Zeenat-Ul-Islam மற்றும் Shakeel Ahmed Dar என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து, மேலும் அப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

 

Trending News