சோபூர் என்கவுண்டர்: 1 பாதுகப்புபடை வீரர் உட்பட 2 தீவிரவாதி பலி...

ஜம்மு காஷ்மீர் சோபூர் பகுதியில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் 1 பாதுகப்புபடை வீரர் உட்பட 2 தீவிரவாதி உயிரிழந்துள்ளானர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 26, 2018, 10:16 AM IST
சோபூர் என்கவுண்டர்: 1 பாதுகப்புபடை வீரர் உட்பட 2 தீவிரவாதி பலி... title=

ஜம்மு காஷ்மீர் சோபூர் பகுதியில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் 1 பாதுகப்புபடை வீரர் உட்பட 2 தீவிரவாதி உயிரிழந்துள்ளானர். 

ஜம்மு&காஷ்மீர்: பாரமுல்லா, புல்வாமா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாதுகாப்பு படையினர் அதிரடித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. தொடர் சண்டைகளில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆறு தீவிரவாதிகளின் உடல்களைக் கைப்பற்றி அடையாளம் காண முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. தீவிரவாதிகளின் உடல்களைப் பெறுவதற்காக உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த சண்டையில் பட்டதாரி ஆய்வாளர் ஒருவரும் தீவிரவாதி என்று கருதி கொல்லப்பட்டதாக கூறி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதனால் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில், தற்போது ஜம்மு மற்று காஷ்மீர் சோபூரில் நடத்திய ன்கவுண்டரில் இரண்டு தீவிரவாதிகள் உட்பட ஒரு பாதுகாப்பு படைவீரர் கொல்லபட்டார். இதை தொடர்ந்து, தீவிரவாத்தில் இருக்கும் பகுதியில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

Trending News