குழந்தையின் உயிருடன் விளையாடிய வாகன ஓட்டுநர்!

மருத்துவமனைக்கு அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடாமல் அலட்சியமாக கார் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Oct 20, 2017, 06:52 PM IST
குழந்தையின் உயிருடன் விளையாடிய வாகன ஓட்டுநர்! title=

கேரளா: மருத்துவமனைக்கு அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடாமல் அலட்சியமாக கார் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் பெரும்பாவூரில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தையை  மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றபோது, முன்னே சென்ற கார் ஒன்று ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் சென்றுள்ளது.

ஆம்புலன்ஸ்-ன் ஓட்டுநர் வழிவிடுமாறு கோரிக்கை விடுத்தும், முன்சென்றவர் இவரை சற்றும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக வழிமறித்துச் சென்றுள்ளார்.

ஆத்திரமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், இக்காட்சிகளை படம்பிடித்து காவல்துறையிடம் அளித்துள்ளார். 

இவரின் புகாரின் அடிப்படையில் வழிமறித்துச் சென்ற வாகன ஓட்டியின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Trending News