Watch: 'ஜெய் ஸ்ரீராம்' - வாள், துப்பாக்கியுடன் தசரா கொண்டாட்டம்; உ.பி.,யில் பாரம்பரியமா?

உத்தரப் பிரதேசத்தில் வாள்களுடனும், துப்பாக்கிகளுடனும் தசரா ஊர்வலம் நடைபெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

Written by - Sudharsan G | Last Updated : Oct 7, 2022, 01:20 PM IST
  • ஊர்வலத்தில் பங்கேற்றோர் ஆயுதங்களுடன் செல்ஃபி மற்றும் வீடியோ எடுத்தனர்.
  • அங்கு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
  • துர்கா பூஜையின் பத்தாம் நாள் அன்று இந்த ஊர்வலம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
Watch: 'ஜெய் ஸ்ரீராம்' - வாள், துப்பாக்கியுடன் தசரா கொண்டாட்டம்; உ.பி.,யில் பாரம்பரியமா? title=

நாடு முழுவதும் நவராத்திரி (அ) துர்கா பூஜை பண்டிகை கடந்த 10 நாள்களாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் இந்த பண்டிகைக்கு வெவ்வேறு பெயர்களும், வெவ்வேறு சடங்குகளும், வித்தியாசமான கொண்டாட்டங்களும் உள்ளன. பெரும்பாலும், பெண் தெய்வங்களின் ஒன்பது அவதாரங்களை கொண்டாடும் நோக்கிலும், ராவணனை ராமர் வதம் செய்ததை கொண்டாடும் வகையிலும் இந்த நவராத்திரி (அ) துர்கா பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகர் மாவடத்தில் நடைபெற்ற தசரா ஊர்வலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அங்கு நடந்த பேரணியில், 'ஜெய் ஸ்ரீராம்' என்ற முழக்கமிட்ட நுற்றுக்கணக்காணோர் தங்களின் கைகளில் துப்பாக்கிகள், வாள்கள் ஆகியவற்றை ஏந்தி வந்ததுதான் அதிர்ச்சியை உண்டாக்கியது.

மேலும் படிக்க | ராம்லீலா விழாவில் ஆபாச நடனம்... பொங்கி எழுந்த உத்தரப் பிரதேச போலீஸ்!

அங்கிருந்தோர், தங்களின் ஆயுதங்களோடு வீடியோ எடுத்தும், செஃல்பி எடுத்தும், சத்தமாக ஒலிக்கப்பட்டுக்கொண்டிருந்த பாடல்களுக்கு நடனமாடியும் வந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

துர்கா பூஜை பண்டிகையின் 10 நாளான  தசரா (அ) விஜய தசமி அன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கொண்டாட்டங்கள் ஆபத்தை விளைவிக்கும் என்றும் இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் போலீசாரை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தனர். 

இதுபோன்ற, பதிவு ஒன்றுக்கு ட்விட்டரில் பதிலளித்த போலீசார்,"தசரா அன்று ஆயுதஙக்ளுடன் ஊர்வலம் செல்வது அப்பகுதியின் பாரம்பரியமான ஒன்று" எனக் குறிப்பிட்டனர். தொடர்ந்து, மற்ற குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | Jalpaiguri: துர்கா பூஜை சிலைக் கரைப்பின் போது ஆற்றில் வெள்ளம்: 7 பேர் பலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News