சுவிஸ் நாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய வழக்கில் 5 பேர் கைது

Last Updated : Oct 27, 2017, 09:42 AM IST
சுவிஸ் நாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய வழக்கில் 5 பேர் கைது title=

லக்னோ ஆக்ராவில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த தம்பதி மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி உள்ளாகி உள்ளது. இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில போலீசார் 5 பேரை கைது செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த இந்த தம்பதியினர், உ.பி., மாநிலம் ஆக்ராவிற்கு சுற்றுலா வந்தனர். ஊரை சுற்றி பார்த்த இவர்கள் பதேபுர்சிக்ரி என்ற இடத்தில் மர்ம கும்பல் தாக்கியது. 

தற்போது சம்பவம் தொடர்பாக நேற்று 2 பேர் கைது செய்தது போலீசார். மேலும் அடையாளம் தெரியாத 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். தற்போது 5 பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். 

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மீது வன்முறை நடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்-அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில அரசிடம் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News