நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது

நிர்பயா வழக்கில் மத்திய அரசின் மேல் முறையீட்டு மனுவை வரும் 11 ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.

Last Updated : Feb 7, 2020, 01:47 PM IST
நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது title=

நிர்பயா வழக்கில் மத்திய அரசின் மேல் முறையீட்டு மனுவை வரும் 11 ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.

தலைநகர் டெல்லியில் டிசம்பர் 16, 2012 அன்று மருத்துவ மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உழுக்கியது. இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1 ஆம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டது. ஆனால், கடைசி நேரத்தில் நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசுன் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட உத்தரவிடாமல் தூக்கிலிட முடியாது என்று மத்திய அரசு மனுவில் தெரிவித்தது.

டெல்லி ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மற்றும் டெல்லி மாநில அரசு தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை வரும் 11 ஆம் தேதி விசாரிப்பதாக கூறிய நீதிபதிகள், மனுவை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Trending News