Lockdown 4.0: 4வது ஊரடங்கில் அதிக சுதந்திரம் வேண்டும்.. மாநிலங்கள் கோரிக்கை

இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்து வருவதால், மாநிலங்கள் தங்கள் பொருளாதாரங்களை அளவீடு செய்வதை ஆதரிக்கின்றன. எனவே நான்காவது ஊரடங்கு காலத்தில் (Lockdown 4) மேலும் சுதந்திரமாக செயல்பட அனுமதி வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 16, 2020, 07:51 AM IST
  • ஊரடங்கு காரணமாக இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்து வருகிறது.
  • பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே கோடை விடுமுறைகளை அறிவித்துள்ளன.
  • கிராமப்புறங்களில் பொருளாதார நடவடிக்கைகள் மறுதொடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்
  • பசுமை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும்.
  • பொது போக்குவரத்து, சந்தைகள் மற்றும் பூங்காக்கள் திறக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மையான மக்களின் கோரிக்கை
Lockdown 4.0: 4வது ஊரடங்கில் அதிக சுதந்திரம் வேண்டும்.. மாநிலங்கள் கோரிக்கை title=

புது டெல்லி: மண்டலங்களை வகைப்படுத்த அதிக சக்தி, முழுமையான சோதனை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மறுதொடக்கம் செய்வது ஆகியவை மாநில அரசுகள் பிரதமர் அலுவலகத்திற்கு (பி.எம்.ஓ) வழங்கிய கொரோனா வைரஸ் (Covid-19) லாக் டவுன் காலம் குறித்து கோரிக்கைகள் ஆகும்.

இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்து வருவதால், மாநிலங்கள் தங்கள் பொருளாதாரங்களை அளவீடு செய்வதை ஆதரிக்கின்றன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டிற்கு வரத் தொடங்குகிறார்கள். நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அவர்களை பாதுகாக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் (Coronavirus)  தொற்று தொடர்பாக திங்களன்று முதலமைச்சர்களுடனான ஐந்தாவது வீடியோ சந்திப்பில், பிரதமர் நரேந்திர மோடி, ஊரடங்கு காலத்தில் (Lockdown) மேற்கொள்ளப்பட வேண்டிய ஆலோசனைகளை முன்வைக்குமாறு மாநிலங்களை கேட்டுக் கொண்டார்.

மே 18 முதல் நாடு நான்காவது ஊரடங்கு கட்டத்திற்குள் நுழையும் போது, அனைத்து மாநில அரசுகள் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் இரண்டிலும் கவனம் செலுத்த விரும்புகின்றன. பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே கோடை விடுமுறைகளை அறிவித்துள்ளன.

மேலும் படிக்க: முழு அடைப்பின் 4-ஆம் கட்டத்தில் எதற்கெல்லாம் அனுமதி அளிக்கப்படும்.

புதன்கிழமை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட தனது அறிக்கையில், கிராமப்புறங்களில், குறிப்பாக விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் அனுமதிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளுடன் ஊரடங்கு தொடர வேண்டும் என்று உத்தரபிரதேச அரசு கோரியுள்ளது. கோவிட் இல்லாத பசுமை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.

அதாவது சில நிபந்தனைகளுடன் பொது முடக்கத்தை (Lockdown) நீட்டிக்கலாம். ஆனால் கிராமப்புறங்களில் பொருளாதார நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்துள்ளோம், ஆனால் பலர் திரும்பி வருவதால், அவர்களை கண்காணிக்க வேண்டும் மற்றும் பரிசோதனை செய்ய வேண்டும். பசுமை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும். சில நடவடிக்கைகள் ஆரஞ்சு மண்டலங்களிலும் தொடங்கப்படலாம் என்று உ.பி. அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

பசுமை மண்டலங்கள் மற்றும் கிராமப்புறங்களில் பொருளாதார நடவடிக்கைகள் மறுதொடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று நிதீஷ்குமார் தலைமையிலான பீகார் அரசாங்கமும் நம்புகின்றனர். பீகார் ஒரு உற்பத்தி மாநிலம் அல்ல. முக்கியமாக அங்கு விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துகிறது. கிராமப்புறங்களில் பொருளாதார நடவடிக்கைகள் தொடர வேண்டும் எனக் கூறியுள்ளது.

மேலும் படிக்க: Lockdown 4 காலத்தில் தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும்.

பஞ்சாப் அரசு, "நாங்கள் ஊரடங்கை நீட்டிக்க ஆதரவாக இருக்கிறோம். மாலை நேரங்களில் கடைகளுக்கு மேலும் மூன்று மணிநேரங்கள் திறந்திருக்க வேண்டும் போன்ற பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக நாங்கள் எங்கள் முயற்சியைச் செய்கிறோம். முன்வைப்பதை நாங்கள் பரிசீலித்து வரும் சில கோரிக்கைகளில், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்க மத்திய அரசாங்கத்தின் கூடுதல் நடவடிக்கைகள் தேவை மற்றும் மண்டலங்களை வகைப்படுத்த எங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும் என்றது. 

தில்லியின் ஆம் ஆத்மி (Aam Aadmi Party) கட்சி அரசாங்கம் பொது போக்குவரத்துடன், மாற்று நாட்களில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கும் சந்தைகளை திறப்பதற்கும் முயன்றுள்ளது. அரசாங்கம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது, அங்கு பொது போக்குவரத்து, சந்தைகள் மற்றும் பூங்காக்கள் திறக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் கூறினர். ஆனால் கல்வி நிறுவனங்கள், முடிதிருத்தும் கடை, ஹோட்டல்கள், சினிமா அரங்குகள் மற்றும் ஜிம்கள் மூடப்பட்டன. ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிறார்கள். ஆனால் தடைகளை மேலும் தளர்த்த வேண்டும் எனவும் கோரிக்கைகள் வந்துள்ளன. 

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் கடைபிடித்தால், பொது இயக்கம் மற்றும் மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து ஆகியவற்றில் ஓரளவு தளர்வு ஏற்படலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan) மத்திய அரசிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும் என்று கேரள அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. 

ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி (Y.S. Jagan Mohan Reddy) தலைமையிலான ஆந்திர அரசு 1 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு ஆதரவாக உள்ளது மற்றும் தெலுங்கானாவில், ஊரடங்கு மே 19 வரை நீட்டிக்கப்படும்.

மேலும் படிக்க: அசத்தும் TASMAC..!! 7 வண்ண டோக்கன்கள் அடிப்படையில் இனி மதுபானம் விற்பனை

ஜிம்கள், 30% உணவகங்கள், கோல்ஃப் ரிசார்ட்ஸ் மற்றும் பிற வசதிகளை மீண்டும் தொடங்க கர்நாடக முன்மொழிந்துள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு தவிர மற்ற மண்டலங்களில் மே 17 க்கு பிறகு பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்தை இயக்குவதற்கும் கர்நாடக அரசு ஆதரவாக உள்ளது.

Trending News