சந்திரகிரகண நரபலி: ஹைதராபாத்தில் கொத்து கொத்தாக மண்டை ஓடுகள்!

கிரகண நாட்களில் நரபலி கொடுப்பதால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கை பரவலாக உள்ளது. இதனால் பல இடங்களில் பல போலி சாமியார்கள் சிக்கியதை நம்மால் பார்க்க முடிகிறது. 

Last Updated : Feb 3, 2018, 08:04 PM IST
சந்திரகிரகண நரபலி: ஹைதராபாத்தில் கொத்து கொத்தாக மண்டை ஓடுகள்! title=

கிரகண நாட்களில் நரபலி கொடுப்பதால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கை பரவலாக உள்ளது. இதனால் பல இடங்களில் பல போலி சாமியார்கள் சிக்கியதை நம்மால் பார்க்க முடிகிறது. 

இந்நிலையில் தற்போது, ஹைதராபாத் வீடு ஒன்றின் மொட்டை மாடியில் பச்சிளம் குழந்தைகளின் மண்டை ஓடுகள் கிடைத்துள்ளது. சமீபத்தில் சந்திர கிரகணம் நிகழ்ந்தேரியதால் இந்த மண்டை ஓடுகள் கிரகண நாள் அன்று பலி கொடுக்கப்பட்ட குழந்தைகளின் மண்டை ஓடுகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் 2 அல்லது 3 மாத குழந்தைகளின் மண்டை ஓடுகளாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தின் சில்லுக்கா நகர் பகுதியில் கடந்த வியழன் அன்று, ஓர் வீட்டின் மொட்டை மாடியில் பச்சிளம் குழந்தையின் மண்டை ஓடுகளை கண்டுள்ளார். கண்டவுடன் அதிர்ச்சியில் அவர் அலறியதால் அருகில் இருந்தவர்கள் அங்கே குவிந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இரங்கிய காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக, மண்டை ஓடுகளை கண்ட பெண்மனி பால லக்ஷ்மியின் மருமகன் ராஜசேகர், அவரது அருகாமை வீட்டைச் சேர்ந்த நரஹரி மற்றும் அவரது மகன் ரஞ்ஜித் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட வீட்டின் மொட்டை மாடியில் ரத்த கரை ஏதும் இல்லை, எனவே வெட்டப்பட்ட தலையில் ரத்தம் உரைந்தப்பின் அவர்கள் அங்கே வைத்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பால லக்ஷ்மி, "நரபலிக்காக ஏன் எனது வீட்டை தேர்ந்தெடுத்தார்கள் என தெரியவில்லை" என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்!

Trending News