செப்டம்பர் 5 அன்று நடைபெற்ற 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று

Bypoll Results For Seven Assembly Seats Today: ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று: எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணிக்கு முக்கிய சோதனை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 8, 2023, 07:34 AM IST
  • ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று
  • எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணிக்கு முக்கிய சோதனை
  • அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமான இடைத்தேர்தல்
செப்டம்பர் 5 அன்று நடைபெற்ற 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று title=

புதுடெல்லி: உத்தரகண்டில் உள்ள பாகேஷ்வர், உத்தரபிரதேசத்தின் கோசி, கேரளாவின் புதுப்பள்ளி, மேற்கு வங்கத்தின் துப்குரி, ஜார்கண்டின் தும்ரி, திரிபுராவின் போக்ஸாநகர் மற்றும் தன்பூர் ஆகிய ஏழு தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்படும். ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று (2023, செப்டம்பர் 8 வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.

ஆறு மாநிலங்களில் ஏழு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

கோசி - உத்தரப் பிரதேசம்
டும்ரி - ஜார்கண்ட்
தன்பூர் மற்றும் போக்ஸாநகர் - திரிபுரா
பாகேஷ்வர் - உத்தரகாண்ட்
துப்குரி - மேற்கு வங்காளம்
புதுப்பள்ளி - கேரளா

இந்த இடைத்தேர்தலானது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக களம் இறங்கியிருக்கும் எதிர்கட்சியான கூட்டணியான இந்திய கூட்டணிக்கு குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களுக்கு முன்னதாக இந்த முடிவுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.

மேலும் படிக்க | ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம்: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்பட்ட மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். உத்தரகாண்டில் உள்ள பாகேஷ்வர், உத்தரபிரதேசத்தின் கோசி, கேரளாவின் புதுப்பள்ளி, மேற்கு வங்கத்தில் துப்குரி, ஜார்கண்டில் உள்ள தும்ரி, திரிபுராவின் போக்ஸாநகர் மற்றும் தன்பூர் ஆகிய 7 தொகுதிகளுக்கு செப்டம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சி (SP) MLA மற்றும் OBC தலைவர் தாரா சிங் சவுகான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கோசி தொகுதி காலியானது, பின்னர் அவர் பாஜகவில் இணைந்தார். இந்திய கூட்டணி கோசி தொகுதியில் திரண்டது, அங்கு சுமார் 50.77 சதவீத வாக்குகள் பதிவாகின. ஜார்கண்டின் டும்ரியில், தகுதி பெற்ற 2.98 லட்சம் வாக்காளர்களில், 64.84 சதவீத வாக்காளர் பங்கேற்பு இருந்தது.

உத்தரகாண்டில், பாகேஷ்வர் சட்டசபை இடைத்தேர்தலின் பதிவான வாக்குகளை எண்ண, 14 மேஜைகளில் 130 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட  ஆட்சியர் அனுராதா பால் அறிவித்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் எம்எல்ஏவும் அமைச்சரவை அமைச்சருமான சந்தன் ராம் தாஸ் காலமானதைத் தொடர்ந்து பாகேஷ்வர் தொகுதி காலியானது.

ஆளும் கட்சியான பா.ஜ.க, அந்த இடத்தை தக்க வைக்கும் முயற்சியில் பார்வதி தாஸை களமிறக்கியுள்ளது. 2007 முதல் அவரது கணவர் சந்தன் தாஸ் தொடர்ந்து நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்றார். அவர் மரணமடைந்ததை  அடுத்து தேர்தல் நடத்தப்படுகிறது. பசந்த் குமாரை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

சரத் பவார் தலைமையிலான NCP பிரிவு, சிவசேனா (UBT), TMC, JMM, AAP, DMK, NC, PDP, CPI(M), CPI, RJD, SP மற்றும் RLD உள்ளிட்ட 28 கட்சிகள்  I.N.D.I.A அணியில் அடங்கும்.

மேலும் படிக்க | G20 Summit: செப்டம்பர் 9 -10 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் விபரம்!

ஜார்க்கண்டில், டும்ரி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளுக்காக இந்திய கூட்டணி மற்றும் NDA வேட்பாளர்கள் காத்திருக்கின்றனர். கிரிதிஹ் மாவட்டத்தில் உள்ள கிரிஷி பஜார் சமிதி, பச்சம்பாவில் வாக்கு எண்ணும் மையம் உள்ளது, 70 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 24 சுற்றுகள் எண்ணிக்கையை மேற்பார்வையிட்டு நேர்மையை உறுதிப்படுத்துகின்றனர். மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும் பல்வேறு ஜார்கண்ட் போலீஸ் பிரிவுகளை உள்ளடக்கிய கூட்டு பாதுகாப்பு படை நிறுத்தப்பட்டுள்ளது.

திரிபுராவில், இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) போக்சாநகர் மற்றும் தன்பூர் ஆகிய இரு இடங்களுக்கும் வெளிப்படையான வாக்கு எண்ணிக்கையை உறுதிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளது, வாக்கு எண்ணும் இடம் சோனமுரா பெண்கள் ஹெச்எஸ் பள்ளி. சுமூகமான நடவடிக்கைக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேற்கு வங்க மாநிலம் துப்குரியில், ஜல்பைகுரியில் உள்ள வடக்கு வங்காள பல்கலைக்கழகத்தின் இரண்டாவது வளாகத்தில் அமைந்துள்ள வலுவான அறையை மத்திய ஆயுதப்படை மற்றும் மாநில காவல்துறையின் பணியாளர்கள் பாதுகாத்து வருகின்றனர். இந்த இடைத்தேர்தலில் தகுதி பெற்ற 2.6 லட்சம் வாக்காளர்களில் 76 சதவீதம் பேர் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தியுள்ளனர்.

புதுப்பள்ளி இடைத்தேர்தலின் முடிவுகளை கேரளாவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது, அங்கு மறைந்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டியால் காலியான தொகுதியை நிரப்ப UDF மற்றும் LDF கடுமையாக போட்டியிட்டன. தெற்கு கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தொகுதி, செப்டம்பர் 5 இடைத்தேர்தலை மாநிலத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சிகளுக்கு கௌரவப் பிரச்சினையாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.

புதுப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணிக்கு பசேலியஸ் கல்லூரியில் உள்ள சிறப்பு வாக்கு எண்ணும் நிலையத்தில் தொடங்குகிறது. முதற்கட்ட எண்ணிக்கையில் தபால் மற்றும் சேவை வாக்குகள் எண்ணப்படும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் 13 சுற்றுகளாக எண்ணப்படும். புதுப்பள்ளியில் மொத்தம் 182 சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும் படிக்க | சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் இவை தான்! அலட்சியப்படுத்த வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News