ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 3 மாதத்தில் முடிவெடுக்க உத்தரவு!!

ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக 7 பேரை விடுவிப்பது குறித்து 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Last Updated : Jan 23, 2018, 01:29 PM IST
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 3 மாதத்தில் முடிவெடுக்க உத்தரவு!!  title=

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுவிப்பது தொடர்பாக 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுக்கு மேல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. 

இந்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மத்திய அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 7 பேரை விடுதலை செய்ய விருப்பமா என்பது குறித்து 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Trending News