Rafale jet விவகாரம்: மத்திய அரசு அறிக்கை அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை தாக்கல் செய்யம் படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

Last Updated : Oct 10, 2018, 12:38 PM IST
Rafale jet விவகாரம்: மத்திய அரசு அறிக்கை அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு title=

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை தாக்கல் செய்யம் படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். 

இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்த வந்த நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ரஃபேல் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரஃபேல் போர் விமானங்களை சராசரி விலையை விட கூடுதல் விலைக்கு வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாக மனுதாரர் வாதாடினார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

Trending News