குஜராத் 2-வது கட்ட தேர்தல்: வருசையில் நின்று பிரதமர் மோடி வாக்களித்தார்!!

குஜராத் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் வாக்களிக்க பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் வந்தார். 

Last Updated : Dec 14, 2017, 12:25 PM IST
குஜராத் 2-வது கட்ட தேர்தல்: வருசையில் நின்று பிரதமர் மோடி வாக்களித்தார்!! title=

குஜராத் மாநிலம் மாநிலத்தில் 2-வது கட்ட சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி அகமதாபாத் சபர்மதி ரேனிப்பில் வாக்களித்தார். குஜராத் சட்டமன்ற தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ரேனிப் என்ற இடத்தில் பள்ளி ஒன்றில் பிரதமர் மோடி வருசையில் நின்று வாக்களித்தார். 

 

 

 

 

 

 

குஜராத் மாநிலத்தில் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 93 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

குஜராத் சட்டசபைக்கான 182 தொகுதிகளில் 89 இடங்களில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அந்த வகையில் இன்று 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இன்று நடந்துக்கொண்டு இருக்கும் குஜராத் மாநில 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 851 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

இந்நிலையில் குஜராத் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் வாக்களிக்க பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் வந்தார். அங்கு ரேனிப் என்ற இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மக்களுடன் வருசையில் நின்று வாக்களித்தார்.

Trending News