விரைவில் ஹாப்பி நியூஸ்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி 2024 பரிசு.. டிஏ உயர்வு அறிவிப்பு

Happy News Central Government Employees: 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு குறித்து மகிழ்ச்சியான தகவல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 7, 2024, 11:34 AM IST
விரைவில் ஹாப்பி நியூஸ்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி 2024 பரிசு.. டிஏ உயர்வு அறிவிப்பு title=

Modi Government Dearness Allowance: 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவலைப்படி மற்றும் அகவலை நிவாரணம் உயர்வு குறித்து விரைவில் மத்திய அரசு அறிவிக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் சமீபத்தில் ஜூன் 2024 மாதத்திற்கான ஏசிபிஐ குறியீடு எண்கள் வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் அகவலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது.

டிசம்பர் 2023 முதல் ஜூன் 2024 வரை CPI-IW 26 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. இதன் மூலமாக அகவலைப்படி உயர்வு சதவீதம் 50.28-லிருந்து 53.6% ஆக உயரும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் பார்த்தால், ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18000 என்று வைத்துக்கொண்டால், ஜூலை மாத திருத்தத்திற்கு பிறகு, அகவலைப்படி உயர்வு 3% எனக் கணக்கீடு செய்தால், அவரது மொத்த சம்பளத்தில் ரூ.540 அதிகரிக்கும்.

இந்த அகவலைப்படி அதிகரிப்பின் மூலமாக, அந்த ஊழியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.6,480 கூடுதல் சம்பளம் கிடைக்கும். 

அதேபோல ரூ.56,900 அடிப்படை சம்பளம் பெறக்கூடிய ஊழியர்களுக்கு அகவலைப்படி உயர்வால் மாத சம்பளத்தில் ரூ.1,707-யும், ஒரு ஆண்டுக்கு சம்பளத்தில் ரூ.20,484-யும் உயரும். 

இந்த அகவலைப்படி அதிகரிப்பு என்பது ஜூலை 2024 முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக ஜனவரி 2024 ஆம் மாதத்திற்கான அகவலைப்படி உயர்வு, மார்ச் 2024-ல் அறிவிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு அகவலைப்படி மற்றும் அகவலை நிவாரணத்தை 4% அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுடைய அகவலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவலை நிவாரணம் என்பது 50% ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. 

7வது ஊதிய குழுவின் கீழ், தொழிலாளர் அமைச்சகத்தின் மூலம் வெளியிடக்கூடிய ஏஐசிபிஐ குறியீடு (AICPI Index) எண்கள் அடிப்படையில் அகவலைப்படி என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவலைப்படி என்பது திருத்தப்படுகிறது. 

ஜனவரி மாத அகவலைப்படி என்பது முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீடு (AICPI Index) அடிப்படையிலும், ஜூலை மாத அகவலைப்படி என்பது ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீடு (AICPI Index) அடிப்படையிலும் தீர்மானிக்கப்படுகிறது. 

2024 ஜூலை மாத அகவலைப்படி 3% அதிகரிக்கப்பட்டால் அனைத்து ஊழியர்களும் மிகப்பெரிய ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். இந்த அகவலைப்படி உயர்வு என்பது பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் அவதிபட்டு கொண்டு இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியகாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். 

இந்த புதிய அகவலைப்படி உயர்வுக்கு பின்பு, ஏழாவது ஊதிய குழு பரிந்துறையின் அடிப்படையில் சம்பளம் பெறக்கூடிய ஆயிரக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்கள் பயனடைவார்கள். 

மத்திய அரசு ஊழியர்களை பொறுத்த வரை, இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஃபார்முலா அடிப்படையில் அகவலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். 

மேலும் படிக்க - விரைவில் தீபாவளி 2024 பரிசு: குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிறது புதிய அறிவிப்பு!

மேலும் படிக்க - பென்ஷன் தேதியில் மாற்றம்.. வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் போட்ட அதிரடி உத்தரவு

மேலும் படிக்க - Important Announcement | ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News