கேரள ஏடிஎம் கொள்ளை: ஒருவர் கைது

Last Updated : Aug 10, 2016, 12:49 PM IST
கேரள ஏடிஎம் கொள்ளை: ஒருவர் கைது title=

கேரளாவில் ஜூலை மாதம் ஏடிஎம்., ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ரோமை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 ரோம் நகரை சேர்ந்தவர்கள் தப்பிச் சென்று விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இவர்கள் மூன்று பேரின் விசாவும் ஜூலை மாதமே காலாவதியாகி விட்டதாகவும், கொள்ளையில் ஈடுபட்டதாக சிசிடிவி பதிவு மூலம் அடையாளம் காணப்பட்ட கொள்ளையனின் பெயர் கார்பிரியல் மரியன் என தெரிய வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் கொள்ளையடித்த இவர்கள் மகாராஷ்டிராவில் தலைமறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது. கொள்ளையடித்தவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

Trending News