ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை

குடியிருப்பு கட்டிடத்தில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 29, 2018, 04:21 PM IST
ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை title=

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா சத்துபோராவில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு இடையில் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. புல்வாமா சத்துபோரா மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு சென்ற பாதுகாப்பு படை வீரர்கள், அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்துள்ளனர். 

 

 

 

 

இதேபோல ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்பொழுது நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது

Trending News