ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் உண்மையில்லை: காங்கிரஸ்

ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக வெளியாக தகவல் உண்மை இல்லை என ரண்தீப் சிங் சுர்ஜேவலா தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 25, 2019, 02:35 PM IST
ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் உண்மையில்லை: காங்கிரஸ் title=

புது டெல்லி: நடந்து முடிந்த 17-ஆம் மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கின்றது. அதே வேளையில் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிக்கான அந்தஸ்து கூட இல்லாமல் பெரும் தோல்வியை கண்டுள்ளது. குறிப்பாக உத்திர பிரதேச மாநிலம் அமோதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரித்தி இராணியிடன் தோல்வி கண்டார்.

காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து, உத்திர பிரதேசம், கர்நாடக, ஒடிசா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் முக்கிய தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். 

இந்த நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து தான் விலகுவதாகவும், அதற்க்கான கடிதத்தை ராகுல் காந்தி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி ராஜினாமா கடிதத்தை அளித்ததாக ஊடங்களிலும், பத்திரிக்கைகளிலும் வெளியான தகவல் உண்மை இல்லை. காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை செய்து வருவதாக காங்கிரஸின் தகவல் தொடர்பு அலுவலர் ரந்தீப் சிங் சுர்ஜேவலா தெரிவித்துள்ளார்.

Trending News