குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கிழக்கு டெல்லியில் வெடித்தது வன்முறை

டெல்லி வடகிழக்கு பகுதியில் உள்ள சீலாம்பூரில் வெடித்தது வன்முறை. போலீஸ்காரர்கள் மீது கற்களை வீசி தாக்ய போராட்டக்காரர்கள். வானத்தை நோக்கி சுட்ட காவல்துறையினர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 17, 2019, 07:57 PM IST
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கிழக்கு டெல்லியில் வெடித்தது வன்முறை title=

புதுடெல்லி: மூன்றாவது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகலில் வடகிழக்கு டெல்லி மாவட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளதால், ஜாமியா நகர் பகுதியில் ஏற்பட்ட போராட்டம் இன்னும் அமைதியடையவில்லை. ஜாபராபாத் மற்றும் சீலாம்பூர் பகுதிகளில் இரண்டு மணியளவில் வன்முறை தொடங்கியது. இந்த வன்முறை வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இப்போது இந்த வன்முறை சம்பவம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமன் கமிட்டியின் தலைவர் டாக்டர் பர்வேஸ் மியான் அமைதியை நிலைநாட்டுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர், "போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் என்.ஆர்.சி (NRC) மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக தான் நீங்கள் போராட்டம் நடத்துகிறீர்கள் என்பதை மத்திய அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளது. போராட்டம் என்ற பெயரில் சிலர் தவறான செயலைச் செய்துள்ளன. மறுபுறம், ஜாபராபாத் சாலையில் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி வருகின்றனர் என வேதனையை தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய டெல்லி வடகிழக்கு கூடுதல் டி.சி.பி ஆர்.பி. மீனா, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு, முதல் 50 முதல் 60 பேர் ஜாபராபாத் சீலாம்பூர் பகுதியில் கூடியிருந்தனர். அதன் பிறகு கூட்டம் அதிகரித்துக்கொண்டே வந்தது. பிறகு சுமார் 2 முதல் 3000 பேர் ஜாபராபாத் சவுக் மற்றும் மவுஜ்பூர் (Maujpur) மெட்ரோ நிலையம் அருகே கூடினர் எனக் கூறினார்.

 

மேலும் பேசிய அவர், காவல்துறையினர் சீலாம்பூர் டீ பாயிண்டில் கும்பலைத் கலைந்து போக சொன்னோம். அவர்கள் எங்களின் பேச்சை கேட்டு திரும்பி தெருக்களில் சென்று கொண்டிருந்தபோது, ​​சிலர் கற்களை வீசத் தொடங்கினர். போலீஸ்காரர்களுக்கு காயம் ஏற்பட்டது. தெருவில் இருந்த சாமானிய மக்களின் வாகனங்களை அடித்து நொறுக்கினர். மேலும் கும்பல் போலீஸ் சாவடிக்கு தீ வைத்தனர்.. இவை அனைத்தும் திட்டமிட்டே செய்யப்பட்டதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. கூட்டத்தில் இருந்து பலத்த கற்கள் வீசப்பட்ட காட்சிகள் கிடைத்தன. எங்களிடம் மொபைல் கேமராக்கள் இருந்தன. அதன் மூலம் காட்சிகளை பதிவு செய்தோம். இன்று நடந்த இந்த ஆர்ப்பாட்டம் குறித்து எங்களிடம் எந்தவித முன்னறிவிப்பு தெரிவிக்கப்படவில்லை. வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினோம். கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினோம். ஆனால் துப்பாக்கிச் சூடு மூலம் யாரையும் சுடப்படவில்லை. எச்சரிக்கை செய்யவே அப்படி செய்தோம். பொது மக்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் எனவும் கூறினார்.

பள்ளி பேருந்தை தாக்கிய போராட்டக்காரர்கள்: 
டெல்லி போலீசார் அளித்த தகவலின்படி, "பள்ளி பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் மூலம் வன்முறை தொடங்கியது. தாக்குதல் நடத்தியவர்கள் பஸ்ஸில் கற்களை வீசினர். அதன் பின்னர் போராட்டக்காரர்களின் கூட்டம் வழிப்போக்கர்களை குறிவைத்தது. வழிப்போக்கர்கள் வாகனங்களை அடித்து நொறுக்கினர். தங்கள் உயிரைக் காப்பாற்றக் கொள்ள வாகன ஓட்டிகள் ஓடத் தொடங்கினார்.

இப்பகுதியில் ஏற்பட்ட வன்முறை செய்திகள் பரவியதால், கூட்டம் அதிகரித்தது. அந்த கும்பல் வடகிழக்கு மாவட்ட டி.சி.பி அலுவலகத்தை சுற்றி கற்களை வீசியது. ஜாபராபாத் காவல் நிலையத்திற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

வதந்திகளைப் பரப்பி கூட்டம் கூடியது:
வன்முறையின் போது, ​​வதந்திகளும் வெளிவந்தன. இதிலிருந்து வளிமண்டலம் தொடர்ந்து மோசமடைந்தது. திடீர் பேரழிவைச் சமாளிக்க மாவட்ட காவல்துறை தயாராக இல்லை. வன்முறை பரவிய பின்னர், கூடுதல் மாவட்டங்கள் மற்றும் ரிசர்வ் போலீஸ் படைகளும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. கூடுதல் பொலிஸ் படை அந்த இடத்தை அடைந்த நேரத்தில், நிலைமை மோசமடைந்தது.

டெல்லி போலீஸ்காரர்களால் கூட கும்பல் தாக்குதல்களில் இருந்து தங்களைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் போலீஸ்காரர்களால் கூட முடியவில்லை. ஏனென்றால், காவல்துறையினரையும் பொதுமக்களையும், அந்த கும்பல் நேரடியாக குறிவைத்து தாக்கியது.

தடியடி நடத்திய டெல்லி போலீசார்... கோபமடைந்த கூட்டம்...
சிறிது நேரம் கழித்து, காவல்துறையினரும் கூட்டத்தின் மீது தடியடி நடத்தி விரட்ட முயன்றனர். இதன் காரணமாக, கோபமடைந்த கும்பல் மீண்டும் காவல்துறை மீது கற்களை வீசத் தொடங்கியது. அதேசமயம் ஒலிபெருக்கிகள் மூலம் அமைதியாக இருக்கவும். கலைந்து செல்லுங்கள் என போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தினர்.

இந்த வன்முறையில் எத்தனை பொது மக்கள் மற்றும் எத்தனை போலீசார் காயமடைந்துள்ளனர். எத்தனை வாகனங்கள் சேதமடைந்துள்ளன? என்பது குறித்து சொல்வது அல்லது முடிவு செய்வது கடினம். ஆம், சேதம் கணிசமானது. காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் தங்கள் அன்புக்குரியவர்களுடன் மருத்துவமனைக்குச் செல்வதைக் காண முடிந்தது.

மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன: 
ஜாபராபாத், சீலாம்பூர், வெல்கம், சாஸ்திரி பூங்காவில் பரவிய வன்முறை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மெட்ரோ நிலையங்கள் உடனடியாக மூடப்பட்டன. ஐ.ஏ.என்.எஸ் (IANS) செய்து ஊடகத்திடம் பேசிய டெல்லி மெட்ரோ ரெயில் டி.சி.பி ஹேமேந்திர சிங், "தற்போது சாஸ்திரி பார்க் மெட்ரோ நிலையம் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு மூடப்பட்டுள்ளது" என்றார். இருப்பினும், சிறிது நேரம் கழித்து, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலம் அருகிலுள்ள வேறு சில மெட்ரோ நிலையங்களை மூடுவது குறித்தும் தகவல் கொடுத்தது.

நிலைமையைக் கையாள ட்ரோனின் உபயோகித்த போலீசார்:
ஆதாரங்களின்படி, நிலைமையை கட்டுப்படுத்த முடியாதது மற்றும் கூட்டம் அதிகமடைவதைக் கண்டு, காவல்துறையினரும் முதன்முறையாக ட்ரோனைப் பயன்படுத்தினர், இதனால் காவல்துறையினர் கூட்டத்தை குறித்து தூரத்திலிருந்து அறிந்துக்கொள்ள முடியும். ட்ரோன் வானத்தில் பறப்பதைக் காண முடிந்தது. ஆனால் ட்ரோனின் பயன்பாடு குறித்து டெல்லி காவல்துறையின் எந்த உயர் அதிகாரியும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

மறுபுறம், இன்று மாலை மத்திய டெல்லியின் தரியகஞ்ச், டெல்லி கேட் மற்றும் ஜமா மஸ்ஜித் பகுதியில் மக்கள் அணிதிரள்வதற்கான சாத்தியங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இது தொடர்பாக, தில்லி காவல்துறை இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட எந்த தகவலையும் வழங்கவில்லை.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

 

Trending News