எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன.. கவிதாவை காவலில் எடுக்க சிபிஐ கோரிக்கை

BRS MLC Kavita: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு விசாரணையில், பிஆர்எஸ் எம்எல்சி கவிதாவை 5 நாள் காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 12, 2024, 01:37 PM IST
எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன.. கவிதாவை காவலில் எடுக்க சிபிஐ கோரிக்கை title=

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. கவிதாவை சிபிஐ அதிகாரிகள் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் கவிதா முக்கிய பங்கு வகித்தார். உண்மைகளை வெளிக்கொண்டு வர முழுமையான விசாரணை அவசியம் என்று சிபிஐ வாதம். அந்த மனு மீது நீதிமன்றம் பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிபிஐ மற்றும் கவிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்ட சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, மனு மீதான உத்தரவை ஒத்தி வைத்தார்.

சிபிஐ சொன்ன குற்றச்சாட்டுகள்

ஆம் ஆத்மி கட்சி சவுத் குரூப்பின் மதுபான வியாபாரி ஒருவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து டெல்லியில் வணிகம் செய்ய ஆதரவை கோரியதாக சிபிஐ தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் தனக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்ததாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் வாட்ஸ்அப் அரட்டைகள் மற்றும் வாக்குமூலங்கள் ஏஜென்சியிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

விஜய் நாயருக்கு ரூ.100 கோடி கொடுக்கப்பட்டதாக அபிஷேக் போயின்பாலி கூறியதை தினேஷ் அரோரா (தற்போது அப்ரூவராக மாறியுள்ள குற்றவாளி) தனது அறிக்கையில் உறுதி செய்துள்ளதாக சிபிஐ கூறுகிறது. சிஆர்பிசி பிரிவு 161 மற்றும் 164ன் கீழ் ஹவாலா ஆபரேட்டர்கள் ரூ.11.9 கோடி பணம் செலுத்தியதாக கூறியதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் கே.கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க - சிறையில் இருந்து வெளியே வந்த சஞ்சய் சிங்.. இனி மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைப்பது சுலபமா?

சிபிஐ வைத்த வாதம் 

கவிதா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் உள்ளதாகவும் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா தனக்கு தெரிந்த உண்மைகளை மறைப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியது.

கே கவிதா தரப்பில் வைக்கப்பட்ட வாதம்

கவிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிதிஷ் ராணா, சிபிஐயின் கோரிக்கையை எதிர்த்தார். கைது சட்டவிரோதமானது என்று கூறினார். 

கவிதாவின் அடிப்படை உரிமைகளை விசாரணை அமைப்பு மீறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, சிறைக்குள் கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் விசாரணை நடத்தினர்.

கவிதா கைது செய்த அமலாக்கத்துறை

மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஐதராபாத்தில் உள்ள கவிதாவின் இல்லத்தில் சோதனை நடத்தினர். நாள் முழுவதும் நடந்த சோதனையின் முடிவில் கவிதாவை மார்ச் 15 அன்று அமலாக்கத்துறை கைது செய்தது.

மேலும் படிக்க - முன்னாள் முதலமைச்சர் மகள் கவிதா கைது... மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News