ஹிமாச்சலப் பிரதேசத்தில் குடியிருப்பில் தீவிபத்து- 5 பலி!

ஹிமாச்சலப் பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் சிக்கிக் கொண்டிருக்கும் பலரை மீட்க தீயணைப்புத்துறை போராடி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 23, 2018, 10:47 AM IST
ஹிமாச்சலப் பிரதேசத்தில் குடியிருப்பில் தீவிபத்து- 5 பலி! title=

ஹிமாச்சலப் பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் சிக்கிக் கொண்டிருக்கும் பலரை மீட்க தீயணைப்புத்துறை போராடி வருகிறது.

 

 

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், மண்டி என்ற மாவட்டத்தில், நெர் சவுக் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து மூன்று தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தற்போது தீயணைப்பு துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் குடியிருப்பில் சிக்கி இருப்பதால், அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கேஸ் சிலிண்டர் வெடித்து, தீ விபத்து ஏற்படுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Trending News