நீதிமன்ற காவலில் அரவிந்த் கெஜ்ரிவால்... மக்களவை தேர்தலில் தாக்கம் இருக்குமா?

Delhi CM Arvind Kejriwal Custody: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இது மக்களவை தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 22, 2024, 11:27 PM IST
  • மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது
  • பணமோசடி தடைச்சட்ட வழக்கின் கீழ் விசாரணை
  • நீதிமன்றத்தில் அமலாகத்துறை சராமாரி வாதம்
நீதிமன்ற காவலில் அரவிந்த் கெஜ்ரிவால்... மக்களவை தேர்தலில் தாக்கம் இருக்குமா? title=

Delhi CM Arvind Kejriwal Custody: டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்றிரவு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அவருக்கு 9 முறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். 

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முன் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர். தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன் தெலங்கானா மேலவை உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா கைதுசெய்யப்பட்டார். 

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் டெல்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் அவரின் பதவியில் நீடிக்கிறார். அவர் கைது செய்யப்பட்ட உடன் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. 

மேலும் படிக்க | டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சியை நடத்த முடியுமா? சட்டம் சொல்வது என்ன?

டெல்லி மதுபானக் கொள்கை முறைக்கேடு வழக்கில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இதை தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலை 6 நாள்கள் நீதிமன்ற காவலில் எடுக்க சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா உத்தரவிட்டார். அதன் மூலம், வரும் மார்ச் 28ஆம் தேதி மதியம் 2 மணிக்குள் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை அடுத்து ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். 

அமலாக்கத்துறை அவரை 10 நாள்கள் காவலில் எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் வாதித்திட்டது. முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் இத்தகைய பணமோசடி செய்ய டெல்லி முதலமைச்சராக இருந்ததை சாதகமாக்கிக் கொண்டார் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் 9 சம்மன்களுக்கும் வேண்டுமென்றே கீழ்படியவில்லை என்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் சரியான தகவலையோ அல்லது உண்மையையோ தெரிவிக்கவில்லை எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

அரவிந்த் கெஜ்ரிவால் தனது அமைச்சர்கள், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்து டெல்லி மதுபான ஊழலின் மூலதாரியாக செயல்பட்டதாகவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அரவிந்த் கெஜ்ரிவால் மீதான இந்த கைது நடவடிக்கை யாருக்கு சாதகமாக அமையும் என்பது அரசியல் களத்தில் பெரும் கேள்வியாய் உள்ளது. ஊழல் குற்றச்சாட்டு அரவிந்த் கெஜ்ரிவால் மேல் உள்ளதால் இந்தியா கூட்டணிக்கு இது பின்னடைவை ஏற்படுத்துமா அல்லது வரலாற்றில் முதல்முறையாக முதலமைச்சரை கைது செய்திருப்பதால் ஆளும் பாஜகவுக்கு கெட்ட பெயரை அளிக்குமா ஆகிய கேள்விகள் வலம் வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பூட்டானின் "ஆர்டர் ஆஃப் தி ட்ருக் கியால்போ" விருது பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News