பெங்களூருவில் மேலும் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை

பெங்களூருவில் தனியார் ஷாப்பிங் மால் நிறுவன பெண் ஊழியருக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்து உள்ளது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Last Updated : Jan 7, 2017, 03:03 PM IST
பெங்களூருவில் மேலும் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை title=

பெங்களூரு: பெங்களூருவில் தனியார் ஷாப்பிங் மால் நிறுவன பெண் ஊழியருக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்து உள்ளது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களூருவில் கடந்த மாதம் டிசம்பர் 31-ம் தேதி எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோட்டில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மர்ம நபர்கள் சிலர், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடுமைகள் அரங்கேறின. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தாமாக முன்வந்து 6 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். 

மேலும் கடந்த 1-ம் தேதி அதிகாலையில் கம்மனஹள்ளியில் இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்தார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெங்களூரு மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் இது வரை கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு கே.ஜி.ஹள்ளி அருகே வசித்து வந்த ஒரு இளம்பெண்ணை ஒரு மர்ம வாலிபர் திடீரென்று கார்த்திகா அருகில் வந்து அவரை கட்டிப்பிடித்தார். பின்பு அவர் கார்த்திகாவின் உதட்டையும் நாக்கையும் கடித்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அந்தப்பகுதியில் வசிப்பவர்கள் ஓடி வந்தார்கள். இதனால் அந்த மர்ம வாலிபர், அவரை தாக்கியதுடன், அவரை கடித்து வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

கண்காணிப்பு கேமராவில் கார்த்திகாவை மர்ம வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து வரும் காட்சிகள் மட்டும் பதிவாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் போலீசாரிடம் வழங்கப்பட்டது. 

 

 

Trending News