Yellow Warning in Odisha: இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு; கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

அடுத்த 48 மணி நேரத்தில் ஒடிசாவின் பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் இடி மற்றும் மின்னல் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 20, 2021, 06:41 PM IST
  • அடுத்த 48 மணி நேரத்தில் ஒடிசாவின் பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் எச்சரிக்கை.
  • ஒடிசாவில் அதிகபட்ச வெப்பநிலையில் (Day temperature) பெரிய மாற்றங்கள் இருக்காது.
  • ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
Yellow Warning in Odisha: இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு; கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை title=

புவனேஸ்வர்: அடுத்த 48 மணி நேரத்தில் ஒடிசாவின் பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் (The India Meteorological Department) இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. IMD-யின் சமீபத்திய புல்லட்டின் படி, அடுத்த 4-5 நாட்களில் ஒடிசாவில் அதிகபட்ச வெப்பநிலையில் (Day temperature) பெரிய மாற்றங்கள் இருக்காது. இருப்பினும், மாநிலத்தின் பல மாவட்டங்களில் மார்ச் 25, 2021 வரை மிதமான மழை பெய்யும்.

ஒடிசா மாநிலத்தின் அடுத்த 48 மணிநேர வானிலை விவரம்: 

நாள் 1 (20.03.2021 முதல் 21.03.2021 வரை)

ஒன்று அல்லது இரண்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் மிதமான மழையும் பெய்யலாம். பின்வரும் மாவட்டங்களான 
சுந்தர்கர், தியோகர், ஜார்சுகுடா, கியோன்ஜார், மயூர்பஞ்ச், பாலசோர், பத்ரக், ஜஜ்பூர், கேந்திரபாரா கட்டாக், அங்குல், தெங்கனல், நுவாபாடா, சம்பல்பூர், சோனேபூர் மற்றும் போலங்கீர் மழை பெய்யும்.

ALSO READ | Gold Rates Today: உயரத் தொடங்குகிறதா தங்கத்தின் விலை? இன்றைய நிலவரம் என்ன?

மஞ்சள் எச்சரிக்கை:
சுந்தர்கர், தியோகர், ஜார்சுகுடா, கியோன்ஜார், மயூர்பஞ்ச், பாலசோர் மற்றும் அங்குல் மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாள் 2 (21.03.2021 முதல் 22.03.2021 வரை)

பார்கர், நுவாபாடா, சம்பல்பூர், ஜார்சுகுடா, சுந்தர்கர், கியோன்ஜார், மயூர்பஞ்ச், ஜஜ்பூர், பாலசோர், பத்ராக், கலஹந்தி, கோராபுட் மற்றும் ராயகடா ஆகிய மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் லேசான மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

மஞ்சள் எச்சரிக்கை: 
பார்கர், நுவாபாடா, சுந்தர்கர், கியோஞ்சர், மயூர்பஞ்ச் மற்றும் ஜஜ்பூர் மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ALSO READ | LIC பாலிசிதாரர்களுக்கு good news: Maturity Document-ஐ எந்த கிளையிலும் சமர்பிக்கலாம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News