ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மரணம்!

தெலுங்கானா மாநிலம் சூரியாபெட் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் (2 குழந்தைகள்) உயிரிழந்துள்ளனர்.

Last Updated : Sep 18, 2017, 02:02 PM IST
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மரணம்! title=

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் சூரியாபெட் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் (2 குழந்தைகள்) உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களில் 4 பேர் பெரியவர்கள், முதல்நாள் இரவு இந்த 2 குழந்தைகளுக்கும் பூச்சிக்கொல்லி கெடுத்து தாங்களும் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுகின்றது.

இந்த குடும்பம் கடுமையான நிதி பிரச்சினையில் சிக்கியிருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக இவர்கள் தற்கொலைக்கு முயற்சித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இறந்தவர்கள் கஸ்தூரி ஜனார்த்தன், அவரது மனைவி கே. சந்திரகாலா ​​(50), அவருடைய மருமகளான கே பிரபாதா (30), அவரது இரண்டு குழந்தைகள், ஜனார்தன் மகன்களில் ஒருவர் கே அசோக் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கஸ்தூரி ஜனார்த்தன் தம்பதியின் மூத்த மகன் மற்றும் பிரபாதாவின் கணவன் சுரேஷ் காணாமல் போயுள்ளதாக காவல்துறை அதிகாரி வை.முகாலியா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை வெளிவந்தது. இறந்தவர்களின் சடலங்கள் வீட்டிலேயே ஒரே அறையில் கிடந்தன.

சுற்றார் கூறியதுபடி, சுரேஷ் பலரிடம் கடன் வாங்கியுள்ளார், மேலும் இந்த மோசமான நிதி சிக்கலை குடும்பத்தினரால் எதிர்கொள்ள முடியவில்லை" என தெரிவித்துள்ளனர்.

Trending News