கேரளா சாலை விபத்தில் 5 பேர் பலி, 2 பேர் படுகாயம்!

கேரள மாநிலம் எர்னாகுளம் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Last Updated : Jul 19, 2018, 09:46 AM IST
கேரளா சாலை விபத்தில் 5 பேர் பலி, 2 பேர் படுகாயம்! title=

பெரும்பாவுர்: கேரள மாநிலம் எர்னாகுளம் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவின் எர்னாகுளம் பகுதிக்கு உட்பட்ட பெரும்பாவுர் பகுதியில் கார் ஒன்று போருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளனாதில் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தானது இன்று விடியற்காலை 3 மணியளவில் நடைப்பெற்றுள்ளதாக அப்பகுதி காவல்துறை ஆனையர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் இறந்தவர்களின் தகவல்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. ஓட்டுநர்களின் கவனக்குறைவின் காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Trending News