டெல்லியில் 4 பெண்மனிகள் மர்மமான முறையில் பலி!

மற்றொரு அதிர்ச்சி சம்பவத்தில் புது டெல்லியை சேர்ந்த 82 வயதான பெண், அவரது மூன்று மகள்கள் மற்றும் ஒரு ஆண் காவலாளி என 5 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

Last Updated : Oct 7, 2017, 12:20 PM IST
டெல்லியில் 4 பெண்மனிகள் மர்மமான முறையில் பலி! title=

புது டெல்லி: மற்றொரு அதிர்ச்சி சம்பவத்தில் புது டெல்லியை சேர்ந்த 82 வயதான பெண், அவரது மூன்று மகள்கள் மற்றும் ஒரு ஆண் காவலாளி என 5 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை துணை ஆணையர் நூபுர் பிரசாத் கூறுகையில், சாஹ்தாராவின் மன்சாரோவர் பார்க் பகுதியில் தங்கள் வீட்டில் இறந்த பினமாக கண்டெடுக்கப்பட்ட இந்த 4 பெண்மனிகளும் ஜந்தால் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.

 

 

மேலும் இச்சம்பவத்தில் இறந்தவர்கள் உர்மிலா ஜின்டால்(82) மற்றும் அவரது மகள் சங்கீதா (56), நுபுர் (48) மற்றும் அஞ்சலி (38) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

காலை 7 மணியளவில் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என காவல்துறை தரப்பு தெரிவிக்கின்றது.

ஆரம்ப கட்ட விசாரணை முடிவில் ‘வீட்டிற்குள் "கட்டாய நுழைவு இல்லை" என்றும், மதிப்புமிக்க எந்த பொருட்களும் திருடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News